பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வு 323 குலைத்து வருவதை 'அங்கு இங்கு எனாதபடி எங்கும். நிலைப் பெற்றிருப்பதைக் காணும்போது உலகம் எங்குப் போய்க் கொண்டிருக்கிறது? என்று அறிஞர்கள் சிந்தி கின்றனர்; மனம் குமுறுகின்றனர். எங்கள் முதல்வர் துரைக்கண்ணு முதலியாரின் மகள் திருமணம் விழுப்புரத்தில் நடைபெற்றது. அதையொட்டிக் காரைக்குடியில் எங்கள் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு விருந்து அளித்தார். அதற்குத் தாளாளர் செட்டியாரும், அறக்கட்டளை மேலாளர் திரு T.V.S. மணியனும் வந்திருந்தனர். விருந்து பகல் பன்னிரண்டரை மணிக்கு நிறைவு பெற்றது. முதல்வர் வீட்டிற்கு முன்னால் போடப் பெற்றிருந்த ஒரு கொட்டகையில் எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அப்போது எல்லோரும் எதிர்பாரா வகையில் ஒரு திடீர் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் அதிர்ந்து போயினர். நானும் வியந்து போனேன். தாளாளர் செட்டியார் மணியனை நோக்கி, மணியன், ரெட்டியாரின் பதவி உயர்வு வீணாக இரண்டாண்டுகளாக இழுபறியாகிவிட்டது. K. W. AL. M. இராமநாதன் செட்டியார் இச்சமயம் மலேயாவுக்குக் குடும்பத்துடன் செல்கின்றார்; கப்பலில் போவதாகச் சொன்னார். பயணம் சொல்லிக் கொள்ள என் இல்லத்திற்கு வந்த போது, ரெட்டியாரின் பதவி உயர்வு இரண்டாண்டு களாக இழுபறியாகக் கிடக்கின்றது. உடனே பதவி உயர்வுக்கு ஆணை பிறப்பித்து, அந்த ஆணையின் நகல் ஒன்றை AIR MAIL தபாலில் எனக்கு அனுப்பு வேண்டியது. கப்பலில் செல்லும் நான் என் இல்லத்தில் புகும்போது ரெட்டியாரின் பதவி உயர்வு ஆணையின் நகல் என் மேசையின் மீது காத்திருக்க வேண்டும். அது இல்லா விட்டால் நான் அறக்கட்டளை உறுப்பினர் பதவியை இதையே காரணம் காட்டி ராஜினாமா செய்து CABLE மூலம் தெரிவித்துவிடுவேன்' என்று சொல்லிப் போனார்,