பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露鬱響 - நினைவுக் குமிழிகள்-3 தடுக்கிட்டுப் போனாா, மணயன வநது சானன போது ஏதோ சூது இருப்பதாக ஐயுற்றேன்; மிஸ்டர் இரட்டியார், அஃது இப்போது உறுதியாயிற்று. உங்களை மாட்டவைக்கும் சதி உருவாகின்றது என்பதை உணர் கின்றேன்’ என்றார். இந்நிலையில் நான் என்ன செய்ய இாம், என்று வினவினேன். அதற்கு அவர் இப்படி இயங்கும் கபட நாடகக்காரர்களை இலேசில் விடக் கூடாது பாடம் கற்பிக்க வேண்டும் அவர்கட்கு' என்றார். . ஏதோ காற்றில் வந்த செய்திக்கு உருவங் கொடுக்க நினைக்கின்றீர்கள். அதற்கு நான் தயாராக இல்லை, இதற்கு ஒரு விசாரணை வைத்து குற்றப் பத்திரிகை தாருங்கள். அதற்கு மறுமொழி தருகின்றேன். அதற்கு மேல் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்’’ என்ற முறையில் எழுதிக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். முதலியார், கொண்டு வரும் கடிதத்தை வாங்கி விடுங்கள்; கையெழுத் துப்போட்டுத் தராதீர்கள். இந்நிலையில் உங்கள் கடிதத்தைக் காட்டுங்கள். அதை அவர் வாங்கிக் கொள்ள மர்ட்டார். பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று அறிவுரை கூறினார். மறுநாள் மாலை அந்திக்காலம் வரையில் என் அறை யில் இருக்குமாறு கூறினார் முதல்வர். எல்லோரும் போன பிறகு 6-மணிக்கு என் அறைக்கு வந்தார். தாம் தயாரித்த நகலைக் காட்டினார். நான் படித்துப் பார்க்கும் போது கோபம் பொங்கி எழுந்தது, அடக்கிக் கொண்டு "ஐயா, நீங்கள் சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து பிழைக்கவந்தீர்கள்; நான் துறையூரிலிருந்து பிழைக்க வந்தவன். நமக்குப் பணம்: நிர்வாகத்திற்கு நம் உழைப்பு. இதற்கு மேல் பிடிப்பு வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் மணியனோடு தோழமை கொண்டு அடாதசெயலில் இறங்கி விட்டீர்கள். மாரியம்மன் கோயிலுக்கு ஆட்டுப்பலி தருவதாக வேண்டிக் கொண்ட அய்யருக்காக நம்மவர் ஒருவர் கொடுவாளைத் தாங்கிக் கொண்டு வெட்டுவதற்கு