பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலைத் தமிழில் பயிற்றல்-கருத்தரங்கம் 、盛莎 குறிப்பிட்டிருந்தோம். இதற்கு M.E படித்தவர்கள்தாம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், எனக்கு M.Ed பட்டம் இல்லாததால் மறுக்கப்பட்டது என்றும் கூறி பதிவிற்காக அனுப்பப்பெற்றிருந்த ரூ 50/- திருப்பி அனுப்பிவிட்டார் .கள். திரு வேங்கடாச்சாரிக்கு மட்டிலும் அனுமதி வழங்கப் பெற்றது, அவர் M.Ed பட்டம் பெற்றிருந்தமையால். இப்படிப் பல ஏமாற்றங்களைக் கூறி துணை வேந்தரை மீண்டும் தற்காலிக ஏற்பாடு மூன்று ஆண்டுகட்குத் தருமாறு வேண்டினேன். ஐயா, பணத்தாசையாலோ பதவியாசையாலோ நான் தங்களைக் கேட்கவில்லை. இப்போது கூட (1) அறிவியல் பயிற்றும் முறை (2) தமிழ் பயிற்றும் முறை (3) கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி. (4) அணுவின் ஆக்கம் (5) காலமும் கவிஞர்களும் (6) மானிட உடல் (தமிழாக்க நூல்) எழுதி வெளியிட் டுள்ளேன். பல்கலைக் கழகத்தில் வேலை காலியிருந்தால் நிரந்தரமாக நியமித்துக் கொள்ளவும் சிந்திக்கலாம்' என்று தெரிவித்தேன். மீண்டும் துணைவேந்தர் பழைய பல்லவியையே பாடினார். தானும் உணர்ச்சி வசப்பட்டேன். ஐயா, எனக்கென்று ஒரு பின்னணியும் இல்லை-பரிந்துரைக்க: முன்னணியும் இல்லை. நானேதான் அலையவேண்டி யுள்ளது-எம்பெருமான் என்னைக் கிட்டத்தட்ட அநாதை யாக வைத்துள்ளான். இப்பொழுது கூட சிலர் காடு வா என்கின்றது; வீடு போ என்கின்றது என்ற நிலையிலும் கூட பதவியிலிருக்க ஆசைப்படுகின்றனர். எனக்குப் படிப்பதற்குக் கூட வாய்ப்பு அளிக்க யோசனை செய்கின்றனர். ஐயா, என்னுடைய வயதில் (41) தங்கட்கு எவ்வளவு அபிலாசைகள் இருந்திருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். துடிப்பே இல்லாத சடமாக இருந்தால் ஒரு படி கூட முன்னேற முடியாது” என்று சொல்லி என் உணர்ச்சியை வெளிப்படுத்தினேன்.