பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 - நினைவுக் குமிழிகள்: தம்மை மெய்மறந்து சுவையின் உச்ச நிலைக்குப் போதல், போன்ற அநுபவத்தைப் பெறுகின்றனர். இவை ஒன்றுமே அறியாமல் இருப்பவர்கட்குக் கூட சுவையின் உச்ச நிலை தட்டுப்படாமற்போகாது. ஆதலால் உடலியல் பற்றி அறிவுள்ளவர்கள் இச்சுவையை அறியார்கள் என்று: கூறுவது அறிவுடைமை அன்று. (3) கவிதை அதுபவத்திற்கு வருவோம். திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின், மெய்மயிர்சிலிர்ப்ப விதிர் விதிர்ப்பு எய்தி என்ற அநுபவம் அறிவியலறிவு பெறாதவர்க்கும். உண்டு. அந்த அறிவு பெற்றவர்க்கும் உண்டு. இந்த அநுபவம் ஏற்படும் போது உடலில் நேரிடும் இந்தச் செயல் களை காரணகாரிய முறையில் அறியார்கள் முன்னவர்கள்; பின்னவர்கள் அவற்றை நன்கு அறிந்தவர்கள். ஆனால் இரு சாராருக்கும் அநுபவத்தில் வேறுபாடு இராது. அறிந்தவற்றில் தான் வேறுபாடு இருக்கும். . . . - (4) தேவார முதலிகள் மூவரும் தலங்கள் தோறும் சென்று அவ்வவ்விடங்களில் கோயில் கொண்டுள்ள மூர்த்தி களின் மீது பாடல்களைப் பாடியிருக்கின்றன்ர். பாடல்கள் கல் மனத்தையும் உருக்குபவை. நமது தொண்டைமான் அவர்களும் வேங்கடம் முதல் குமரி வரை உள்ள பல தலங்களுக்குச் சென்று: பல மூர்த்திகளை வழிபட்டு அவர்கள் மீதுள்ள பாடல்களில் தம் உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கின்றார். மேலும் அக்கோயில்களிலுள்ள மூர்த்திகளின் சிற்ப அழகு, கல்வெட்டுகளில் உள்ள செய்திகள் இவற்றில் மிகவும் ஈடு பட்டுப் பேசுகின்றார். வரலாற்றுக் கண் கொண்டு.நோக்கு கின்றார். இதனால் தொண்டைமானின் பக்தி ஏதாவது ா மூவர் முதலிகளின் பார்வை பத்தியை نیز به புராணக் கதைகளில் அவர்தம் டைமானின் ته . د سین:: . . . ” “'= ' . ***: .:-: