பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

噬纷密 . நினைவுக் குமிழிகள்-3 அம்மானின் இரண்டாம் மனைவியும் இயற்கை எய்தினார். இறந்த செய்தி இரண்டு திங்களுக்குப் பிறகு என்னை எட்டியது. என் அம்மானின் மகள் வயிற்றுப் பேரன் A. இராசகோபாலன் இப்போது எண்ணுாரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றுகின்றவன் வந்து போகின்றான். நான் கூட அவன் திருமணத்திற்குப் போக முடியவில்லை. திருமணம் முடிந்து எண்ணுரரில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் போய் வர முடிந்தது. இப்போது என் போக்கு வரவு குறைந்து கொண்டே வருகின்றது. இறுதியாக மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத பெரும் பயணத்திற்கு முன்னர் நடமாட்டம் குறையத்தானே வேண்டும்? - பெரகம்பியில் என் நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், உறவினர்கள் இவர்களில் பெரும்பாலோர் திருநாடு 'அலங்கரித்து விட்டனர். வாழ்ந்து வரும் ஒரு சிலரைப் பார்க்கும் ஆசை ஒரு தலைக்காதல்’ போல் அவ்வப்போது தோன்றுகின்றது. இந்த ஆசை இப்பிறவியில் நிறைவேறு வதாகத் தோன்றவில்லை. * - குமிழி-155 48. என் கோபிப் பயணம் சின் அன்னையார் மறைந்து நான்கு திங்கள்தான் நிறைவெய்தின. இந்தத் துக்கம் என்பால் இன்னும் நீங்க வில்லை. ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் iண்டார் வருவரோ மாநிலத்தீர்' என்ற ஒளவைப் பயின் வாக்கு சிறிது சிறிதாக என் துக்கத்தைக்