பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம்.ஏ. தேர்வு பெறல் 2乳 جمجمہ مسدسے விருந்தின் உணவு வகைகள். வேள்வி நடைபெறும் இடத்திற்கு உள்ள துரம் 100 கெஜம் இருக்கும். நடந்து வந்து விடலாம். வாடகைக் கார் அமர்த்தலாம்: சா. க. கோபித்துக் கொள்வார் என்று அதைச் செய்ய வில்லை . எளிமையை விரும்புபவர். அவரவர் சக்திக்குத் தக்கவாறு வாழவேண்டும், வீண் ஜம்பம் கூடாது என்ற கொள்கையுடையவர் சா.க. என்பதை ஒன்றரை மாதப் பழக்கத்திலேயே புரிந்து கொண்டிருந்தேன். - முற்பகல் 10; மணிக்கு வேள்விக்குப் போப் வரலாமா என்று சுவாமிகளைக் கேட்டேன். முறுவலித்து ஒப்புக் கொண்டார். அவருடன் விருந்து கொள்வதற் சா. கனேசன் வருகின்றார் என்றும், 12, 12 மணிக்கு வேள்வியிலிருந்து நேராக அழைத்து வந்து விடலாம் என்றும் சுவாமிகளிடம் தெரிவித்தேன். அவர் ாேம் மகிழ்ச்சி அடைந்தார். சுவாமிகளும் அடி:ே முற்பகல் 10 மணிக்கு வேள்வி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம். சா. க. வை சுவாமிகட்கும் கவாமிகளைச் சா. க. வுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன். ஒரிரு முறை தாளில் எழுதிக் காட்டினார். சுவாமிகள் பச்சை நிற ஆடையைப் போர்த்திருந்தார். கெளபீனம்தான் உடுத்தின ஆடை . தங்க நிறத் திருமேனி. முகப்பொலிவு நன்றாக இருக்கும்; கண்களில் அருள் பாய்வது போன்ற தோற்றம். வேள்வியில் கூடியிருந்தோர் அனைவரும் சுவாமிகளை வியப்புடன் நோக்கினார்கள். பலர் என்னைச் சுவாமி களைப் பற்றிக் கேட்டார்கள் நான் அடிகள் திருச்சி பக்கம்’ என்று சுருக்கமாகப் பதில் இதுத்தேன். பொதுவாக *广。岛。 சாதுக்கள் மீது மிகவும் அன்பு கொண்டவர். செட்டி நாட்டுப் பெருமக்களும் இளைஞர்களும்கூட இவர் கள் மீது விருப்பும் அன்பும் கொண்டவர்களே. சரியாகப் பகல் 12 மணிக்கு விருந்து தொடங்கியது. குதி ரைவால் அரிசி; முனை முறியாதது. என்றுமில்லாத மு றையில் அன்று தேங்காய் சாதமும் எலுமிச்சை சாதமும்