பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii அதிகாரிகளின் கபோதித் தன்மைகள்-முதனலாவற்றிற் கேல்லாம் நல்ல சவுக்கடி இந்நாளில் தரப்பட்டுள்ளது. பேராசிரியருடைய சிறந்த கற்பனைகளையும் அநுபவ உண்மைகளையும் நகைச்சுவை உரையாடல்களையும் அவ்வப்போது துய்த்த மு. வ. அவர்கள் பேராசிரியர் ரெட்டியார் அவர்களை நோக்கி நீங்கள் இந்தத் திறமை களையெல்லாம் பயன்படுத்தி நாவல்கள் எழுதலாமே." என்று கூறுவாராம். ரெட்டியாருடைய அத்தகைய படைப்பாற்றலெல்லாம் இந்நூலின்கண் அமைந்துள்ளன. மேலும் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புபோல எதிர்கால அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தமிழகத்தில் ஒரு கால கட்டத்தில் நிலவிய சமுதாய பொருளாதார கல்வி பற்றிய செய்திகளையெல்லாம் அறிந்து கொள்வதில் இவ்வரிசை நூல்கள் (ஐந்து) சிறப்பிடம் பெறும் என்பதற்கு ஐயமில்லை. பேராசிரியர் ரெட்டியார் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஒரு தும்பிக்கை. எனினும் இத்தும்பிக்கை சோர்ந்துபோகும் போதெல்லாம் இவர்தம் இறை நம்பிக்கை அச்சோர்வைப் போக்கிப் புத்துயிர் கொடுத்திருப்பதைப் பேராசிரியர் ரேட்டியார் மிக உருக்கத்தோடு இந்நூலில் பல விடங்களில் சுட்டியிருப்பதைக் காண்கிறோம். மனிதனின் அறிவும் ஆற்றலும் தோற்றுப் போகும்போது ஆழ்ந்த இறை நம்பிக்கை அவனை எவ்வாறு உய்யுமாறு நிலை நிறுத்து கின்றது என்பதைப் பல அநுபவ நிகழ்ச்சிகளால் பேராசிரியர் உறுதிபடுத்துகிறார். இந்நூற் சிறப்புக்களில் இதுவும் கோடிட்டுக் காட்டற்குரியது. எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர் ரெட்டி யாரின் д; Go» 6h! Шгт 6Ar , உவமைகள் நிறைந்த உரையாடல்களைக் கேட்டு இன்புறும் நண்பர்கள் இவருக்கு Doctor of Simile atgörgy 62G5 Lullt - 56) 35 augofììg;géî» வேண்டும் என்று நகைச் சுவையாகக் கூறுவர்; இந்தித்துறை அப்பட்டத்தை வழங்கியே மகிழ்ந்தது. இவ்வாறு எதைக் p, (ii)