பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நினைவுக்குமிழிகள்.தி மேற்குறிப்பிட்ட பிரசாதவகைகள் விலைக்கும் கிடைக்கும். கட்டணம் வாங்கிக் கொண்டு இலட்டு: வினியோகிக்கும் அறையின் பக்கத்திலுள்ள அறையிலேயே இப்பிரசாதவகைகள் கிடைக்கும்.பிரசாதவகைகளை உண்டு நீர் அருந்தி வெளியில் வரும் பயணிகள் பேருந்து நிலையத். திற்கு வந்தவுடன் பேருந்துகள் கிடைத்து விடுகின்றன. சில சமயங்களில் கொண்டை ஊசிவளைவுகள் பேருந்துகள் சுழன்று சுழன்று வேகமாகத் திரும்புவதால் சிலருக்குக் குமட்டல் ஏற்படுகின்றது. பிரசாதங்களைப் பேருந்திலிருந்த வண்ணம் வாந்தி எடுக்கின்றனர். வயிறு நிறைய உண்ட வுடன் பேருந்தில் இறங்கி வருதல் கூடாது. பிரசாதங்கள் சத்துள்ளவை. வெண்பொங்கலில் நெய் அபரிமிதமாகச் சொரியப் பெற்றிருக்கும்; எளிதில் செரிமான மாகாது, பேருந்தில் மலைக்கு ஏறி வருபவர்கட்குப் பெரும்பாலும் வாந்தி வருவதில்லை. நடையாக இறங்கி வருபவர்கள் வாந்தி எடுப்பதில்லை. வயிறு சிறிது ஏதோ செய்கிற மாதிரி இருந்தாலும் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவதால் இவர்கட்கு எந்தத் தொல்லைகளும் நேரிடுவதில்லை,