பக்கம்:நினைவுச்சரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 நினைவுச்

சிவபுரத்தில் யார் வீட்டில் எது நடந்தாலும் அது வெகு சீக்கிரமே பப்ளிக் ஆகிவிடும்”. ஒளிவு மறைவு என்பதற்கு அங்கே இடமே கிடையாது.

ஆச்சி வாய்க்கு ரெண்டு கரண்டிச் சீனிதான் போட ணும். அவ சொன்னபடியே நடந்திட்டுதே. இந்தச் செம் பகம் பெரிய ஆளுதான் !’ என்று ஆச்சியின் வியப்பர்களான அம்மாள்கள் பேசினர்கள். ஒருத்தி இந்த விஷயத்தை விரி வாக எழுதி, ஒரு ஸ்பூன் சீனியும் கவரில் வைத்து, தபாலில் செம்பராநல்லூருக்கே அனுப்பியம் தீர்த்தாள்.

ஒழுங்கான பாதை வழியாக ("த்ரூ ப்ராப்பர் சேனல்:): இந்த விவகாரம் எல்லாம் பால்வண்ணம்பிள்ளே காதுகளையும் எட்டியது. ஒகோன்னனும் 1’ என்று விழிப்பு பெற்ருர் அவர். * அப்படியா விஷயம் !’ என்று தலையை ஆட்டிக்கொண்டார். அதனுலேதான் அண்ணுச்சி தனது நாற்பது வருஷ அஞ்ஞாதவாசம் பற்றி வாயே திறக்கலே ! அன்னேக்கு பாளே யங்கோட்டையிலே செம்பகம் பரிஞ்சு பரிஞ்சு உபசாரம் பண் னினதும், தன் மகளுக்கு இவாள் பேரை விட்டிருப்பதை எடுத்துச் சொன்னதும், இவாள் பதிமூணு பதிலுை வயசுச் செம்பகத்தின் அழகை நினைச்சு நினைச்சு உருகினதும்-அடா அடா ! இப்பல்லா எல்லாம் புரியுது என்று மகிழ்ந்துபோனர். அண்ணுச்சிகிட்டே இதைப்பத்தி எல்லாம் ஒண்னும் பேசப்படாது. நமக்குத் தெரிஞ்சதாவே காட்டிக்கிடப்படாது. வே, இளம் வயசிலே இதெல்லாம் நடக்கிறதுதான். இப்படி எல்லாம் ஏதாவது செய்துக்கிட்டிருந்தால்தான் மனுசன்னே ஆவான். இல்லேன்னு சொன்ன, அவன் கல்லுச்சிலே அல்லது கடவுள் ஆயிருவான். கடவுள்கள்கூட இதுமாதிரி எல்லாம்ஏன், இதைவிட அதிகமாகவே-என்னென்னவோ பண்ணி யிருப்பதை நம்ம புராணங்கள் விஸ்தாரமாகவே சொல்லுது. பின்னேப் போட்டு பேசுவானேன்? விட்டுத்தள்ளும் 1 என்று போதித்தது அவர் மனக்குறளி.

என்ருலும், சுகவாசி சூரியன் பிள்ளை போன்றவர்கள் அவரிடம் வந்து எதையாவது சொல்லிவிட்டுப் போனர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/220&oldid=589479" இலிருந்து மீள்விக்கப்பட்டது