பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2BO நினைவு அலைகள் சமுதாயத்தில் நூற்றுக்கு எண்பத்தைந்து பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஏணியின் கீழ்ப்படிக்கட்டுகளில் குழுமி, குமைந்து கொண்டிருக்கிறார்களே. அவர்களுக்கு அது எப்படி மருந்தாகும்? எப்படி நீதி வழங்கும். 35. முதல் சுயமரியாதை மாநாடு தமிழ்நாடு காங்கிரசு தலைவர் ஈ.வெ. ராமசாமி தந்தை பெரியார் அண்மைக் காலம்வரை நம்மோடு வாழ்ந்தவர். கம்மா இருந்தவர் அல்லர். தான் உண்டு, தன் சொத்து உண்டு என்று நிம்மதியாக இருந்த வேடிக்கை மனிதர் அல்லர். கோடிக்கணக்கான ஏழை எளியவர்களின் போற்றுதலைப் பெற்றவர். சிலருடைய துாற்றலுக்கும் ஆளானவர். எச் சமுதாயத்திலும் சீரிய சிந்தனையாளர்களிடம் இயற்கையாக எழுகிற அரசியல் விடுதலை உணர்ச்சியைப் பெற்றவர். சொந்த நலன்களை நொடியில் துறந்தவர். இந்திய தேசிய காங்கிரசைத் தமிழகத்தில் வளர்த்தவர். அவரே எதிர்த்துப் போர் தொடுத்த காலத்தில், சட்டென்று அழிக்க முடியாத அளவு உறுதியாக, வளமாகக் காந்தியத்தைத் தமிழகத்தில் ஓங்கித் தழைக்கச் செய்தவர் ஈ.வெ.ராமசாமி பெரியார் என்பது மிகையல்ல. ஒத்துழையாமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, கதரைப் பரப்புதல் ஆகிய நான்கு திட்டங்களை மெய்யாக, முழுமூச்சோடு. செயல்படுத்தியவர் அக்காலத் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் ஈ.வெ. ராமசாமி. இத்திட்டங்களை நிறைவேற்றுவதில், பெரும்பொருள் இழப்பிற்கு ஆளானார். இன்னல்களுக்கும் சிறைத் தண்டனைகளுக்கும் ஆனானார். அது மட்டுமா? இன்றைக்கும் எல்லோரும் நினைத்துப் பார்க்க முடியாத புரட்சியை ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே செய்து காட்டியவர். காங்கிரஸ் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி. தம் குடும்பமே, பொது வாழ்க்கையில் பொதுக் கிளர்ச்சிகளில் பங்குகொள்ளச் செய்தவர் பெரியார். பாசமும் பற்றும் இயற்கை செயற்கரிய செய்த பெரியவர்கள் இவற்றைக் கடந்தவர்களாக விளங்குகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/322&oldid=787159" இலிருந்து மீள்விக்கப்பட்டது