பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x:1

உதவியுள்ளார். இது, அவர் வெளியிடும் எனது நூல்களில் பத்தாவது ஆகும். அவருக்கு எச் சொற்களால் நன்றி கூறி நிறைவு செய்யமுடியும்! நெடுங்காலமாக எனக்குக் கை கொடுத்து வரும் அன்பர்கள் ‘நினைவு அலைகள் முதல் பாகம் வெளியான ஒராண்டிற்குள் முதல் பதிப்பு முழுவதையும் வாங்கிப் பெருமைப் படுத்தியமைக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அளித்த ஆர்வமிக்க ஆதரவே, இரண்டாம் பகுதியைக் கொண்டு வரும் துணிவைத் தந்தது.

நினைவு அலைகள் இரண்டாம் பகுதியையும் தயவு செய்து வாங்கிப் படியுங்கள். செயற்கரிய செய்வதற்குத் தன் முயற்சி, பலருடைய ஆதரவு, காலத்தின் சூழல் எனப் பல தேவை என்பதை உணருங்கள். பெரியோரை வியத்தலுக்குப் பதில், சிறியோர்க்கு உணர்வு ஊட்டுங்கள் என்று வேண்டிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய நாவல் ஆர்ட் அச்சக உரிமையாளர், கவிஞர் நாரா. நாச்சியப்பனுக்கும், பிழை திருத்தி உதவிய திரு. சு.வ. நீலகண்டனுக்கும் நன்றி கூறுகிறேன்.

எத்தனையோ அதிர்ச்சிகள் குறுக்கிட்டாலும் சமாளித்து என் கட்டுரைகளைத் தொகுத்துப் பகுத்து நூலாக்க உதவிய புகைப் படங்களைத் திரட்டி உதவிய நண்பர் திரு. தி.வ. மெய்கண்டாருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியுடையேன்.

நெ.து. சுந்தரவடிவேலு

32, கிழக்குப் பூங்கா சாலை, செனாய் நகர், சென்னை-6000.30.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/13&oldid=623021" இலிருந்து மீள்விக்கப்பட்டது