நெ. து. சுந்தரவடிவேலு 425
ஏதேதோ பொதுப்படையாகப் பேசிக்கொண்டு இருக்கையில் திரு. வி.கே. இராமசாமி முதலியார் எங்களுடன் வந்து கலந்து கொண்டார்.
சில வினாடிகளில், அப்போதைய அமைச்சர் திரு. பரமேசுவரனும் அங்கு வந்து சேர்ந்தார், அவரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
என்னை முதுகில் தட்டியபடியே, அடுத்த இருக்கையில் அமர்ந்தார். அவரும் நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்; நண்பர்கள்.
சில நொடிகள் ஓடின. பேச்சு, அரை வேளைப்படிப்பு முறையின் பக்கம் திரும்பியது.
பரமேசுவரன் என்னைப் பார்த்து
‘'சுந்தரவடிவேலு, புதிய திட்டம் பற்றித் தங்கள் தனியான கருத்து என்ன? ஒளிக்காமல் சொல்லுங்கள்; இங்கே, வெளியார் எவரும் இல்லை’ என்று கேட்டார்.
நான் ஊமையாக இருந்தேன்.
அளகேசனின் விளக்கம்
சில மணித்துளிகளுக்குப்பின், அளகேசன் குறுக்கிட்டார்.
‘'சுந்தரவடிவேலு, இது பற்றித் தம் மனைவியோடு கூடப் பேசியிருக்க மாட்டார். நீங்கள் கேட்பது சரியல்ல. அவர் உள்ளத்தில் உள்ள உண்மை, கிணற்றில் வீழ்ந்த கல்தான்’ என்று பரமேசுவரனைப் பார்த்துக் கூறினார். அம் மதிப்பீடு துல்லியமானது.
“அப்படித்தான்’ என்று பக்தவத்சலனார் கூறவும் பேச்சை.அதோடு விட்டு விட்டார்கள்.
‘புதிய திட்டம் எப்படி உருவானது; அதன் நன்மை, தீமை என்ன? இவை பற்றி அண்ணா சா. குருசாமி என் வாயைக் கிளறப் பார்த்தார். அவரது முயற்சியும் வீணாயிற்று.
முதல்வரின் தனிச் செயலர் வந்தார்
ஒரு விடுமுறை நாள்காலை; சிறிது ஓய்வாக வீட்டில் இருந்தேன்.
கார் ஒன்று வந்து நின்றது; அதை ஒட்டி வந்தவர், வண்டியை விட்டு இறங்கினார். வந்தவர் எவர்?
முதல் அமைச்சரின் தனிச் செயலர் திரு. சபாநாயகம் ஆவார்.