பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

எண்ணத்தை மாற்றிக் கொண்டு ’நினைவு அலைகள்’ என எழுதத் தொடங்கினார்.

நல்லவர்களாக வாழ்வதும், நல்லவர்களை உருவாக்குவதுமே நாகரிகமான சமுதாயத்தின் வெற்றி எனலாம். சமுதாயத்தின் நலத்திற்கு நல்ல எண்ணங்களை நினைத்தல் மட்டுமே போதாது! நினைத்த நல்லனவற்றைச் செயல்படுத்த வேண்டும்! அச் செயல்பாடுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். அத்தகைய செயல்பாடுகளுள் ஒன்றாகவே எமது பதிப்பகம் நெ. து. சு. அவர்களின் நினைவு அலைகளை மறு பதிப்பாக வெளியிடுகிறது. ஏதாவது ஒரு நூலை வெளியிட வேண்டும் என்றில்லாமல், தமிழ்ச் சமுதாயத்தின் நலனுக்கு உகந்த, சிறந்த நூலைத் தர வேண்டும் என்கிற பெரு நோக்கில், தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உதவும் என்கிற சிந்தனையில், இன்றைய சமூகச் சூழலை ஆரோக்கியமுடையதாக்க இந்த நூல் அவசியம் தேவை என்கிற வகையில், தெரிவு செய்து வெளியிட்டுத் தமிழ்ச் சமுதாயத்தின் இளந் தலைமுறையினருக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இந்த நூலை வெளியிட அனுமதி தந்த திரு. சி. லெனின், திரு. துரைசாமி ஆகியோருக்கு எங்கள் நன்றி.

சாந்தா பதிப்பகத்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/10&oldid=480526" இலிருந்து மீள்விக்கப்பட்டது