பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3B நினைவு அலைகள் “எனவே, அலுவலர் மட்டத்தில் ஆய்வு செய்யவில்லை. நேரே, இரகசியமாக அமைச்சர் அவையின் நிதிக்குழுவின் முன் கொண்டு வர, இயக்குநருக்கு அனுமதி கொடுத்துள்ளோம்” என்று நிதிச் செயலர் திரு. டி. ஏ. வர்கீஸ் முன்னுரை கூறினார். திட்டத்தை விளக்கினேன் சுருக்கமான அம் முன்னுரை முடிந்ததும்; குழுத் தல்ைவர் முதலமைச்சர் காமராசர் என்னைப் பார்த்து, “உங்கள் திட்ட்த்தை விளக்கிச் சொல்லுங்கள்” என்று ஆணையிட்டார். - - நான் மூன்று நன்மைத் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினேன்.

  • “அரசு ஊழியர்களாக உள்ள ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே,

ஒய்வு ஊதியம் பெறுகிறார்கள். o _ மற்றவர்களுக்கு ஒய்வு ஊதியத்திற்குப் பதில், அவர்கள் திங்கள்தோறும் போட்டு வைக்கும் காப்பு நிதியோடு, நிர்வாகமோ, நிர்வாகமும் அரசும் சேர்ந்தோ, சமதொகை வழங்கும் முறை செயல்பாட்டில் உள்ளது. “ஆசிரியர்கள் ஒய்வு பெறும்போது, மொத்தமாகச் சில ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே பெறுகிறார்கள். .."அநேகமாக அந்த நிதி முழுவதும் வீட்டில் நடக்கும் திருமணம் போன்றதில் செலவாகிவிடும். "அப்புறம் வயிற்றுச் சாப்பாட்டிற்கும் திண்டாடுவோரே அநேக்ர். "ஆசிரியர்களின் முதுமைக் காலத்தில், அவர்கள் அல்லலுக்கு மாற்று என்ன? = - . . . "மொத்தத் தொகையோடு, திங்கள்தோறும் தொடர்ந்து ஒருதொகை கிடைக்கச் செய்வதே!. o “அதற்கு வழி செய்வதே புதிய திட்டம். இதை ஏன் மூன்று நன்மைத் திட்டம் என்று அழைக்கிறோம்? “மூன்று நன்மைகள் அடங்கி யிருப்பதால் அப்படி அழைக்கிறோம். 1. ஏற்கெனவே உள்ள காப்பு நிதி முறை தொடரும். "2 ஆசிரியர்களுக்கு ஒய்வு ஊதியம் அளிக்கும் திட்டம் சேரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/78&oldid=788617" இலிருந்து மீள்விக்கப்பட்டது