பக்கம்:நிலாப்பாட்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“குருவி கொண்டுவந்த தங்கக் காசை அந்த உண்டியிலே போட்டால் எத்தனையோ ஏழை களுக்கு உணவு கிடைக்கும். ஏரியுண்டாக்கி நாட்டைச் செழிப்புள்ளதாகச் செய்யவும் அது உதவியாக இருக்கும்” என்று நிலாப்பாட்டி கருதினாள். அதனால் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடந்து. கோவிலுக்குச் சென்று, அந்தத் தங்கக்காசை உண்டியில் போட்டுவிட்டு வந்தாள்.

கிழவியின் நல்லெண்ணத்தை அறிந்து குருவி பெருமையடைந்தது. இருந்தாலும், தனது எண்ணம் நிறைவேறவில்லையே என்று அதற்கு வருத்தம் உண்டாயிற்று. அது மறுநாளும் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் போட்டது. அந்தக் காசைக்கொண்டாவது நிலாப்பாட்டி உணவுப்பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது குருவியின் ஆசை. ஆனால், அவள் அதையும் உண்டியில் போட்டு விட்டாள்.

சில நாட்கள் தினமும் இப்படியே நடந்து வந்தது. ஒரு நாளைக்காவது அவள் ஒரு தங்கக் காசைத் தனக்காக வைத்துக்கொள்ள மாட்டாளா என்று அந்தக் குருவி துடிதுடித்தது. அதனுடைய பேச்சிலே என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தது. நிலாப்பாட்டிக்கு அதன் கத்ருது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் தங்கக் காசைத் தனக்காக எடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. "கண்ணு, நீ எனக்காக வருத்தப்பட வேண்டாமடா. நம் நாட்டு மக்களெல்லாம் சுகப்பட்டால் அதுவே போதும். இந்த

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/17&oldid=1117032" இலிருந்து மீள்விக்கப்பட்டது