இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழிய உலகம் வாழிய உலகம் வாழிய அன்பறம் வாழிய உயர்நல மாண்புகள் எல்லாம் பொங்கும் மங்களம் எங்கும் தங்குக புன்மையும் சிறுமையும் பொன்றியே மறைக இன்பமும் எழிலும் கலையுடன் ஒங்குக எம்மனுேர் ஆகவே அனைவரும் வாழ்க பஞ்சமும் பசியும் துஞ்சியே தொலைக பார்மிசை என்றும் அமைதியே நிலவுக உண்மையும் கருணையும் உளந்தனில் நிறைக உன்னதக் கொள்கைசேர் வாழ்வதே மலர்க மாநிலம் பேரின்ப வீடதாய்ப் பொலிக மக்கள் எல்லோரும் இறையருள் பெறுக. I 枋