பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது தான் பொம்பிளை பயந்து கூச்சல் போடுகிறாள் என்று அந்த இளைஞர்கள் - மூன்று பேர் - எண்ணிவிட்டார்கள். உடனேயே வளைவு வீட்டின் முன் இடத்தில் புகுந்து, வாசலின் அளிக்கதவை பலமாகத் தள்ளினார்கள். கதவு உள்புறம் தாழிடப் படாததால் சடாரென்று திறந்து கொண்டது. மூன்று பேர்களில் ஒருவன் கையில் இரண்டு முருங்கைக் காய்கள் வைத்திருந்தான். வழியில் ஒரு வீட்டு மரத்தில் காய்த்துத் தொங்கிய காய்களில் இரண்டை அவன் பறித்து வந்திருந்தான். தன் வீட்டுக்குக் கொண்டு போவதற்காகத் தான். இப்போது அவை அடிக்கிற குச்சிகளாகப் பயன்பட்டன. அவனுக்கு திருட்டுப் பய எங்கே என்று கத்திக் கொண்டு மூன்று பேரும் உள்ளே புகவும், மூலையில் பதுங்கி நின்ற உலகம்மாள் என்ன செய்வது என்று விளங்காமல் திகைத்துப் போனாள். அவளுக்குப் பேச்சு எழவில்லை. இதற்குள் சுவர் மூலையில் மூடிமுக்காடிட்டு நின்ற உருவத்தை முருங்கைக்காய்ப் பேர்வழி கண்டுகொண்டான். இதோ நிற்கான் திருட்டுப்பய என்று கூறி, அந்த உருவத்தை முருங்கைக் காய்களால் அடிஅடி என்று அடித்தான். உலகம்மாள் வாய்திறக்காமல் நிற்கவே, خدمير lfi அறைகள் பலமாக விழுந்தன. வடக்கு வீட்டிலிருந்து ஒரு அம்மாள் கைவிளக்கை எடுத்து வந்தாள். எங்கள் வீட்டிலிருந்து அண்ணன் மேசை விளக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். நாங்களும் வேடிக்கை பார்க்கக் கூடினோம். வெளிச்சம் வந்ததும், அடித்தவன் ஆளை இனம் கண்டு கொண்டான். அவன் அந்த வீட்டாருக்கு நன்கு அறிமுகமானவன். அக்கா நீயா? என்று ஆச்சர்யத்தோடு கேட்டான். அவள் வெட்கத்தால் கோணிக்குறுகி நின்றாள். அவளால் பேச இயலவில்லை. தலை கவிழ்ந்தபடி மவுனமாக நின்றாள். நெசத் திருடன் யாரும் வரலே. அக்கா எங்களை பயப்படுத்தனும் கிறதுக்காக விளையாட்டாத் திருடன் திருடன்னு கூச்சல் போட்டா, தெருவோடு போன நீங்க நெசமாத் திருடன் வந்திருக்கான்னு நெனச்சு உள்ளே வந்துட்டீங்க என்று சுந்தரி விளக்கம் கூறினாள். நல்ல விளையாட்டு தான் போ. முருங்கைக்காய் இரண்டும் நார் நிலைபெற்ற நினைவுகள் 38 161