பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாராப் பிஞ்சு போகிற அளவுக்கு நான் அடிகொடுத்திருக்கேன். முதல் அடி விழுந்ததுமே அக்கா தடுத்து நிறுத்தி நான் தான்னு சொல்லி யிருக்கலாமில்லே? என்று அவன் பேசினான். ராத்திரி நேரத்திலே இதென்ன விளையாட்டு இப்ப லேசாப் போச்க விபரீதமா வேறு யாராவது வந்து தாறுமாறாக அடித்து உதைத்திருந்தால் என்னாகிறது என்று அவன் சொன்னான். திரும்பி நடந்தான். அவனோடு வந்தவர்களும் போனார்கள். அவர்கள் போனபிறகு இப்படி நடக்குமின்னு நான் நினைக்கவே யில்லை. விளையாட்டு விபரீதமாயிட்டுது என்று சொல்லிச் சிரித்தாள் உலகம்மாள். அப்புறம் அவள் இத்தகைய குறும்புத் தனங்களில் ஈடுபடவில்லை. எங்கள் வீட்டில் டேபிள் லேம்ப் (மேசை விளக்கு) என்கிற பெரிய விளக்கு பெட்ரூம் லைட்'எனும் சிறு விளக்கு இவை தவிர நாலு அடி உயரமிருந்த அழகான பெரிய குத்துவிளக்கு ஆகிய மூன்று விளக்குகள் இரவு நேரங்களில் எரிந்து வெளிச்சம் தரும் இவற்றின் வெளிச்சத்தில் தான் நாங்கள் பாடம் படித்தோம். அண்ணனுக்கு பெரிய மேசை விளக்கு நானும் தம்பியும் குத்து விளக்கின் இருபக்கங்களிலும் அமர்ந்து படிப்போம். அந்தப் பித்தளை விளக்கு அப்பா பெருங்குளத்தில் வேலை பார்த்த காலத்தில், ஏரல் ஆசாரியிடம் சொல்லிச் செய்தது. குடங்கள், குத்து விளக்கு செம்பு மற்றும் பாத்திரங்களை பித்தளையில் லெட்சணமாகவும் கனமானவையாகவும் செய்து விற்பனைக்கு அனுப்புவதில் ஏரல் ஆசாரிகள் பெயர்பெற்றிருந்தார்கள். எங்கள் வீட்டுக்காகச் செய்யப்பட்ட கனமான பெரிய விளக்கின் விலை அக்காலத்தில் வெறும் இருபத்தைந்து ரூபாய் தான். அதைப் போன்ற விளக்கின் விலை இப்போது ஆயிரம் ரூபாய்க்கும் அதிக மாகவே சொல்லப்படுகிறது. குத்து விளக்கு கை விளக்கு முதலியவற்றை எரியச் செய்வதற்கு அந்நாள்களில் பின்னக் கெண்ணை (பின்னைக்காய் - அதாவது புன்னைக்காய், புன்னைமரத்தின் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்) தான் உபயோகப்படுத்தப் பெற்றது. - குத்து விளக்கை பூட்டுபூட்டாகக் கழற்றி, அதன் பாகங்களை 162 : வல்லிக்கண்ணன்