பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாந்தர். பாடாவதி விளக்கு சிம்னியும் அநேக நாள்கள் துடைக்கப் பெறாமல் கரிபடிந்து காணப்பட்டது. புதிய லாந்தரை எடுத்துப் போன பண்ணையாரு இப்ப இது தான் நான் கொண்டு வந்த லைட்டு என்று இந்தப் பழைய விளக்கை தாறாரு எசமான் வீட்டிலே இது மாதிரி லாந்தரே கிடையாது. அன்னைக்கு உங்ககிட்டே கொடுத்தது புதிய அரிக்கன்லைட்டு, இது ரொம்பப் பழசாக இருக்குதே என்று எவ்வளவோ சொன்னேன். அவரு தான் சொன்னதையே சொல்றாரு நான் கொண்டு வந்தது இந்த லைட்டு தான்; எங்க வீட்டிலே வேற அரிக்கன் லாந்தரே கிடையாது என்று கழுவஞ்சாதனை சாதிக்காரு பேரு தான் பண்ணையாரு நல்ல மனசு இல்லே அவருகிட்டே என்று வேலைக்காரன் புலம்பித் தீர்த்தான். நல்ல புது லைட்டை எடுத்திட்டுப் போயிட்டு, இப்படி மோசமான லைட்டை கொடுத்து அனுப்பியிருக்காரே என்ன மனுசன் அவரு என்று அம்மா குறைபட்டுக் கொண்டாள். போகுது போ, அவரு தரம் அவ்வளவு தான் என்று அப்பா அந்த விவகாரத்தை ஒதுக்கிவிட்டார். பண்ணைய விளையில் பெயர்பெற்ற ஒரு நாடாரும் இருந்தார். சிவலிங்க நாடார் என்று. கை எலும்பு முறிவு, கால் எலும்பு முறிவு, மனித உடலில் எந்தப் பாகத்தில் எந்த எலும்பு முறிந்து போனாலும் அவர் முறையான சிகிச்சை செய்து நேர்படுத்தி விடுவார். கைதேர்ந்த மருத்துவர் அவர். பெருங்குளத்தில் இருந்தபோது எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. நான் ஒரு விபத்தை ஏற்படுத்திக் கொண்டேன் என்று சொல்ல வேண்டும்! சின்னவயசில் எனக்கு தலைமுடி நீளமாக வளர்ந்து தொங்கியது. எனது பதினான்காவது வயதில் தான் முடி வெட்டப்பட்டு, கிராப் தலையாக மாறியது. நீண்ட தலைமுடியை நன்றாக வாரி, சடைபின்னி, தினந்தோறும் பூவைத்து அழகுபடுத்துவாள் அம்மா. காது குத்தி கடுக்கன்கள் அணியப்பட்டிருந்தன. கைகளில் காப்பும் கால்களில் பாதச் சலங்கையும் மாட்டி பெற்றோர்கள் மகிழ்வுற்றனர். அண்ணனுக்கும் தம்பிக்கும் தலைமுடிநீளமாகவே வளரவிடப்பட்டிருந்தது. நிலைபெற்ற நினைவுகள் 38 73