பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬 முன்னுரை அனைத்துத் தரப்பினரும் வியந்து பாராட்டக்கூடிய ஒரு சாகச நாயகன் (ஹீரோ) இல்லை நான். நான் ஒரு சாதாரணன். எனது வாழ்க்கையும் சாதாரண மானதுதான். பலரையும் வசீகரிக்கக்கூடிய வாழ்க்கை அனுபவங் கள் எனக்கு எதிர்ப்பட்டதும் இல்லை. அத்தகைய சுவாரசியமான அனுபவங்களை நான் தேடிச் சென்றதுமில்லை ஆக்கிக்கொள்ள வும் இல்லை. வாழ்க்கை ஒட்டத்தில் கலந்து வகை வகையான நிகழ்வுகளை எதிர்கொண்டு, சுவையாக விவரிப்பதற்கு ஏற்ற பல்வேறு அனுபவங்களை நான் சுவைத்ததுமில்லை; சுவைக்க ஆசைப் பட்டதும் இல்லை. வாழ்க்கை நதியின் ஒரத்தில் ஒதுங்கி நின்று அனைத்தையும் அனைவரையும் சும்மா வேடிக்கையாகப் பார்த்துத் திருப்தி அடைந்த எளியவன் நான். இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். இந்நிலையில் என் வாழ்க்கைக் கதையை நான் ஏன் எழுதவேண்டும் என்கிற எண்ணம் எனக்கு என்றும் உண்டு. ஆனாலும் என் கதையை நான் மீண்டும் மீண்டும் சொல்ல நேரிட்டவாறு இருக்கிறது. வாழ்வின் இந்த விபரீதமுரணும் எனக்கு வேடிக்கையாகப் படுகிறது. என் நண்பர்களும் என் எழுத்துக்களைப் படித்து ரசித்த அன்பர்களில் அநேகரும், நான் பார்த்த வாழ்க்கையும் அது என்னில் ஏற்படுத்திய மனப் பதிவுகளும் எழுத்தில் பதிவு செய்யப் பட வேண்டியவை. உங்களுடைய வாழ்க்கை சாதாரணமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள். நீங்கள் ஏற்று வாழ்ந்த வாழ்க்கை முறையை சாதாரணமாகப் பலரும் ஏற்று நடக்க இயலாது