பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 % நிலைபெற்ற நினைவுகள் பஞ்சாங்கம் அச்சடிக்கத் தொடங்கியதுமே அந்த ஆண்டு எந்த வீட்டை விலைக்கு வாங்குவது என்று அவர் முடிவு செய்து விடுவார் என்று அவரைப் பற்றி நாரண துரைக்கண்ணன் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். - நாரண துரைக்கண்ணன் முதல் சந்திப்பிலேயே என்னிடம் அன்பும் பிரியமும் காட்டலானார். அவ்வப்போது ஆபீசுக்கு வந்து போய்க்கொண்டிருக்கும்படி என்னிடம் கூறினார். பிராட்வேயை ஒட்டிய ஒரு தெருவிலிருந்து தமிழ்மணி என்ற வாரப்பத்திரிகை வந்து கொண்டிருந்தது. ஆல்பின் பர்னாண்டோ ஆசிரியர். தினமணி நாளிதழை இரண்டாக மடித்த அளவில் அமைந்திருந்த அந்தப் பத்திரிகையின் பதினாறு பக்கங்களையும் அவரே நிரப்பிவிடுவார். அவர் ஒரு தொடர்கதை எழுதி வந்தார். முடிவற்று, வருடக் கணக்கில் வளர்ந்து கொண்டிருந்த மிக நீண்ட கதை அது. மணிஓசை என்றொரு பகுதி ஒரு பக்கம் முழுவதும் நிறைந்திருக்கும். பலருக்கும் எழுதப்பட்ட பகிரங்கக் கடிதங்கள் அந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கும். விறுவிறுப்பாகவும் சுவையாகவும் ஆசிரியர் அக்கடிதங்களை எழுதியிருப்பார். ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் இப்படிக்கு டிங்-டாங்’ என்று கையெழுத்திடப்பட்டிருக்கும். அரசியல் அக்கப்போர்களும் வம்பளப்புகளுமே அதிகம் அக்கடிதங்களில் எழுதப்பட்டிருக்கும். வாசகர்கள் விரும்பிப் படிக்கும் பகுதியாக அது இருந்தது. சென்னையில் இருந்த முக்கியமான விளம்பர ஏஜன்சிகளுக்கும் போய் வந்தோம். அந்நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருந்த பிரமுகர்களை அவரவர் வீட்டுக்குப்போய் கண்டு பேசினோம். கிராம ஊழியன் பொங்கல் மலருக்கு விளம்பரம் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான். - மலருக்குத் கதை கட்டுரை கேட்பதற்காக எழுத்தாளர்களின் வீடு தேடிச் சென்றோம். மாலைவேளை, முன்னிரவு போன்ற நேரங்களில் தான் போனோம். பகலில் அநேகர் அலுவலகம் அல்லது வேறு எங்காவது போயிருக்கக் கூடும் என்று திருலோகம் கருதினார். கி.வா. ஜகந்நாதன் வீட்டுக்கு இரவில் தான் போனோம். அவர் அன்புடன் உபசரித்தார். இரவு உணவை அவருடன் நாங்களும் சாப்பிடவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் சேகரித்துவந்த நாடோடிப் பாடல்கள் பற்றிச் சொன்னார்.