பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 & நிலைபெற்ற நினைவுகள் அந்நேரங்களில் அங்கே வரக்கூடிய எழுத்தாளர்கள் சிலரின் அறிமுகம் எனக்குக் கிட்டியது. ந.சிதம்பரசுப்ரமணியன் அப்படித் தான் அறிமுகமானார். சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும், உளவியல் ரீதியிலும் அழகான சிறுகதைகள் பலவற்றை அவர் எழுதியிருந்தார். சக்கரவாகம் என்ற பெயரில் அவை தொகுப்பாக வந்திருந்தன. பிற்காலத்தில் இதயநாதம்’ எனும் நல்ல நாவலை. சங்கீதத்தை நாதோபசனையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு இசை மேதையின் வாழ்க்கை அனுபவங்களைச் சித்தரிப்பது ஆக்கிப் புகழ்பெற்றார் அவர் மணிக்கொடி சிறுகதைப் பத்திரிகை நடந்த காலத்தில் மணிக்கொடிக்கு அவ்வப்போது பணஉதவி செய்தவர் அவர் என்று மணிக்கொடி வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு தடவை பராமஸ்வாமியை சந்திக்க நேர்ந்தது. பி.எஸ். ராமையா கால மணிக்கொடிக்குப் பிறகு, அந்த இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுப் பத்திரிகையைத் தொடர்ந்து சிறிது காலம் நடத்தியவர் அவர். ப.ரா. என்று அறியப்பட்டிருந்தார், திருநெல்வேலிக்காரர். பிற்காலத்தில் திருநெல்வேலி நகரசபையில் தலைவராகி, நகரவளர்ச்சிக்குப் பல நன்மைகள் செய்த பெருமையும் அவருக்கு உண்டு. மணிக்கொடி ஆசிரியராக இருந்த சமயத்தில், மைக்கேல் காலின்ஸ், சீனா முதலிய புத்தகங்களை எழுதி, அவற்றை நவயுகப் பிரசுராலய வெளியீடுகளாகப் பிரகரித்திருந்தார். அந்த லிமிட்டெட் நிறுவனத்தைப் பொறுப்பாகக் கவனித்து வந்தவரும் يوغي 3 # சினிமா உலகம் பொங்கல் மலருக்கு விளம்பரங்கள் சேகரிப்பதற்காகச் சென்னை வந்த பி.எஸ். செட்டியார். ஒருநாள் நவசக்தி அலுவலகத்துக்கு என்னைத் தேடி வந்தார். அங்கே இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு கிளம்பினார். காலை நேரம் ஒரு ஒட்டலில் பூரி கிழங்கு காபி சாப்பிட்டோம். செட்டியார் பேசிக் கொண்டே சாப்பிட்டார். 'நீங்கள் ஊருக்குப் போறதா சொல்லிவிட்டு சென்னைக்கு வந்து விட்டது எங்களுக்கெல்லாம் வருத்தம் தந்தது. அப்படிப் புறப்படுகிற அன்று கூட ராத்திரி 10 மணி வரை விழித்திருந்து கடிதங்கள் எழுதி டைப் செய்து எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி விட்டு வந்ததைப் பற்றி வீட்டிலே அடிக்கடி சொல்லுவாங்க. நான் சென்னைக்குப் போறேன், கட்டாயம் போயாகணும் என்று என்னிடம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம். அப்படிச் சொன்னால் நான் அதை அனுமதித்திருக்க மாட்டேன் என்கிற