பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 * நிலைபெற்ற நினைவுகள் உண்மைகள் என்று வாழ்க்கை, சமூகம், மனிதர்கள் பற்றிய நையாண்டித்தனமான சிந்தனைகள், ஒரங்க நாடகங்கள் என்று எழுதினேன். கடிதங்களும் அதிகம் அதிகமாக எழுதினேன். 'நீங்கள் கடிதங்கள் அதிகம் எழுதுகிறீர்கள். உங்கள் சம்பளத்தில் அரைவாசிக்கு மேல் தபால் செலவிலேயே காலியாகிறது. இது அவசியமா? என்று ஒருமுறை நண்பர் திருலோக சீதாராம் என்னைக் கேட்டார். 'சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தானே வாழ்க்கையின் நோக்கம்? எழுதிக் கொண்டிருப்பது எனக்கு சந்தோஷம் தருகிறது. கடிதங்கள் எழுதுவது என் சந்தோஷங்களை அதிகப்படுத்துகிறது’ என்றேன். “உங்கள் எழுத்துக்களை புத்தகங்களாகக் கொண்டு வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படவில்லையா?’ என்று நண்பர் வேறொரு சமயம் கேட்டார். 'காலம் வருகிறபோது அவை வந்துவிட்டுப் போகட்டும். வெறுமனே ஆசைப்படுவதால் மட்டும் காரியங்கள் நடந்து விடுவதில்லை. மேலும் முயற்சிகள் எப்போதும் உரிய பலன்களைப் பெற்றுத் தருவதுமில்லை என்று சொன்னேன். என் எழுத்துக்கள் புத்தக வடிவம் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் நான் மேற்கொண்ட சில முயற்சிகளின் முடிவு என்னை அவ்வாறு கருதத் துண்டியது. 1944 ஆரம்பத்தில் நான் சென்னையில் நவசக்தி' அலுவலகத்தில் தங்கி இருந்தபோது ஒருநாள் அல்லயன்ஸ் கம்பெனி குப்புசாமி அய்யரை கண்டு பேசினேன். அவர் தமது நிறுவனம் மூலம் நல்லநல்ல புத்தகங்களை வெளியிட்டு வந்தார். "தமிழ்நாட்டுச் சிறுகதைகள்' வரிசையில் தொடர்ந்து பல எழுத்தாளர்களின் சிறுகதைகளை புத்தகங்களாகப் பிரசுரித்தார். என்னுடைய கதைகளையும் வெளியிட இயலுமா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் மகிழ்வுடன் சம்மதித்தார். கதைகளைக் கொடுங்கள் என்றார். நான் பதினைந்து கதைகளைத் தொகுத்து அவரிடம் அளித்தேன். அவற்றில் பட்டாசுக்கட்டு’ என்றொரு கதை இருந்தது. அந்தப் பெயரிலேயே கதைத் தொகுதியை வெளியிடலாம் என்று அவர் கூறினார். வெளிவர இருக்கும் நூல்கள் பற்றிய விளம்பரங்களில் அந்தப் பெயரும் இடம் பெற்றது. ஆயினும்