பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 * நிலைபெற்ற நினைவுகள் மனித நேயத்தின் தலை சிறந்த வடிவமாகத் திகழ்ந்தார். இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். சிற்றேடுகளின் காவலராக வாழ்நாளெல்லாம் மிளிர்ந்தார். பாரதி, புதுமைப்பித்தன் பாதையில் வாழ்நாளெல்லாம் பயணம் செய்தவர் வ.க. - வ.க. வுடன் சுமார் முப்பது ஆண்டுகளாகப் பழகி நான் கற்றுக் கொண்ட பாடங்கள் பல. வ.க என்ற எளிய, இனிய மனிதனின் ஆளுமை, அன்பினாலும், அறிவினாலும், கடுமையான உழைப்பினாலும், முயற்சியினாலும் கட்டப்பட்டது. வ.க.வின் நினைவுகள், வ.க. விட்டுச்சென்றுள்ள நூல்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்றும் ஆக்கமும் ஊக்கமும். கொடுத்துக் கொண்டே இருக்கும். வக பற்றிய என் நினைவுகளைப் பதிவு செய்ய வாய்ப்பளித்த சந்தியா பதிப்பகத்தார்க்கு என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

3. o

  • >

o