பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நிலைபெற்ற நினைவுகள் வழக்கமான காரியங்கள் வழக்கம் போல் நடந்தன. காலம் மாறுதலற்று ஒடிக் கொண்டிருந்தது. என் மனக்குறை தீர வழி எதுவும் பிறந்துவிடவில்லை. மேலும் மூன்று மாதங்கள் ஒடிப்போயின. இனியும் இங்கேயே இருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தேன். நல்ல விதமாகச் செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு பிரிந்து போவது நடக்கக்கூடிய காரியமாக இல்லை. ஆகவே, ஒரு வழி சொல்லிப் பெருவழி போவதே நான் செய்ய வேண்டிய செயல்முறையாகும் எனத் தீர்மானித்தேன். நான் திருநெல்வேலியை விட்டு வந்து பத்து மாதங்களாகி விட்டன: அம்மாவுக்கு உடல்நலம் சீராக இல்லை; என்னைப் பார்க்க விரும்புகிறாள் என்று சொல்லிவிட்டு திருநெல்வேலி போவதாகப் பெயர் பண்ணி, சென்னைக்கு ரயில் ஏற வேண்டியதுதான் என்று திட்டமிட்டேன். எனவே என் அண்ணாவுக்கு உண்மை நிலைமை விளக்கிக் கடிதம் எழுதினேன். நான் உடனே ஊருக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பும்படி கேட்டேன். அவ்வாறே கடிதம் வந்தது. அதைச் செட்டியாரிடம் காட்டி, ஊருக்குப் போவதற்கு அனுமதி பெற்றேன். பணமும் பெற்றுக் கொண்டேன். இரவு 12 மணி அளவில் கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு ரயிலும், சென்னைக்கு ஒரு ரயிலும் புறப்படுவதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். புறப்பட வேண்டிய நாளில் இரவு பத்து' மணி வரை, எழுத வேண்டிய டைப் செய்ய வேண்டிய கடிதங்கள் பலவற்றையும் எழுதி முடித்து, மேஜையில் சீராக வைத்தேன். வீட்டில் எல்லோரும் துரங்கிவிட்டார்கள். 11 மணி அளவில், பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினேன். ரயில் நிலையம் துரத்தில் இல்லை. வீட்டைவிட்டு மெதுவாக வெளியில் வந்து வேகமாக நடந்து ஸ்டேஷனை அடைந்தேன். கிருஷ்ணன் என்னைத் தேடிக் கொண்டு வந்துவிடக்கூடாது என்று மனம் உருப்போட்டவாறு இருந்தது. சென்னைக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு உரிய ரயிலில் ஏறி, மறைவாக உட்கார்ந்து கொண்டேன். வண்டி புறப்படும் வரையில், ’கிருஷ்ணன் வந்து விடுவாரோ! என்னைக் கண்டுபிடித்து விடுவாரோ? என்ற உள்ளப்பதைப்பு எனக்கு இருந்தது?