பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கிறது! நீ ஒரு பக்கம் ஒதுங்கி நில்லு! இப்பொழுதே உனக்குப் பாடம் கற்பித்தால்தான், நீ திருந்துவாய் !’ அவளுடைய ஆவி துடித்தது. ஏது செய்வது என்று அறியாமல், அவள் ஒரு பக்கமாகத் தரையிலே அமர்ந்துவிட்டாள். - லெகிரி உள்ளுக்குள்ளே மகிழ்ச்சியடைந்து, டாம், இங்கே வா!' என்று கூறினன். அவன் உடனே முன்னால் வந்து நின்றான். லெகிரி அவனைப் பார்த்துப் பேசலாளுன் : நான் உன்னை விலைக்கு வாங்கியது சாதாரண வேலைக்காக அல்ல என்பதை உனக்கு முன்னமேயே சொல்லியிருக்கிறேன். உனக்கு மேலான பதவி கொடுக்க எண்ணியிருக்கிறேன். நீ இங்த அடிமைகளை வைத்து வேலை வாங்கவேண்டும். அந்த வேலையை இன்று, இந்த இரவிலேயே, ே தொடங்கிவிடுதல் நல்லது. இதோ இருக்கிற இந்தப் பெண்பிள்ளையை அழைத்துப்போய், நீ சவுக்கால் அடிக்கவேண்டும் சவுக்கால் அடிப்பதை நீ எத் தனையோ முறை பார்த்திருப்பதால், உனக்கு அதைச் சொல்லித்தர வேண்டியதில்லை!" 'யச்மான், என்னை மன்னிக்க வேண்டுகிறேன்! எனக்கு இந்த வேலையைக் கொடுக்க மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். இந்த வேலை எனக்குப் பழக்க மில்லை. நான் ஒருபோதும் அடித்ததில்லை-என்னல் அது முடியாது' - - உடனே லெகிரி கையில் சவுக்கை எடுத்து ஓங் கிக்கொண்டே, 'உனக்கு முன்னால் தெரியாத பல விஷயங்களை இங்கே கற்றுக்கொள்வாய். இதோ கற்றுக்கொடுக்கிறேன், பார்!’ என்று சொல்லி, அவன் முகத்தில் கண்டி அடித்தான். பிறகும் அவன் உடல்

92

92