பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

யம் அவர்களுக்கு உதவி செய்தது. வெகு விரைவிலே ஐக்கிய மாகாணத்தைவிட்டுக் கானடாவுக்குச் செல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கானடாவைச் சேர்ந்த ஸ்திரீ யொருத்தி, அவர்களுக்கு உதவி செய்து, தானும் அவர்களுடன் வருவதாகச் சொல்லி யிருந்தாள். கானடாவுக்குச் செல்வதற்கு அவர்கள் கப்பலேறி ஈரி என்ற ஓர் ஏரியைக் கடந்து செல்ல வேண்டி யிருந்தது. கப்பலில் ஏறும்பொழுது போலீஸார் அவர்களைப் பிடித்துக் கொள்ளக்கூடும். தப்பியோடிய அடிமைகளைப் பற்றிய விவரங்களெல்லாம் அவர் களுக்குத் தெரிந்திருக்கும். தவிர, அடிமை வியா பாரியின் ஆட்களும் கப்பல் புறப்படும்பொழுது அங்கே வந்து தேடிப் பார்ப்பார்கள். - ஹாரிஸால் சுடப்பட்ட லோக்கர் என்பவனும் குண்டுபட்ட காயம் குணமாகி, ஹாரிஸுடன் தங்கி யிருந்தான். அவனும், அடிமை வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு, மேற்கொண்டு நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தீர்மானித்திருந்தான். ஹாரிஸ், எலிஸா முதலியோர் தனக்குச் செய்த உதவிக்காக அவன் கைம்மாறு செய்ய விரும்பினான். நீங்கள் இப்பொழுதுள்ள நிலையிலேயே கப்பலில் ஏறினால், போலீஸ்காரர்கள் நிச்சயமாக உங்களைப் பிடித்துக் கொள்வர். எலிஸா ஆண்வேடம் தரித்தாகவேண்டும். குழந்தை ஹாரிக்குப் பெண்வேடம் போடவேண்டும். நீயும் அதிக வயதானவனைப் போல வேடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் ' என்று அவன் ஹாரி எலிடம் தெரிவித்தான். அவன் கூறிய யோசனைப்படியே செய்யப்பட்டது.

1 0 3

103