பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

mாவிடம் கொடுத்தாள். அவளும் குழந்தையும் அந்த உடைகளை அணிந்துகொண்டு, புறப்படத் தயாரா யிருக்கும்படி அவள் சொன்னுள். அன்றிரவு பர்ட் தானே வண்டியை ஒட்டிக் கொண்டு சென்ருர், வண்டிக்காரன் கூடச் சென்றி ருந்த போதிலும், கரடுமுரடான பாதையில் தானே கவனித்து ஒட்டவேண்டும் என்று அவர் விரும்பினர். வண்டிக்குள்ளே எலிஸா ஹாரியைத் தன் மடியில் வைத்துத் தட்டிக்கொண்டிருந்தாள். அவர்கள் இரவில்கெடுநேரத்துக்குப்பின் டுரோம் பின் வீட்டை அடைந்தனர். அங்கே டுரோம்பிடம் எலிஸாவையும் குழந்தையையும் ஒப்படைத்துவிட்டு, பர்ட் உடனே திரும்பிவிட்டார். திரும்புமுன், அவர் களுடைய செலவுக்காக, அவர் டுரோம்பிடம் ஐம்பது டாலர் கோட்டுகளையும் கொடுத்துச் சென்ருர். 7. டாம் மாமாவின் பிரிவு எலிஸா தப்பியோடிய மறுநாள் காலே, டாமை அழைத்துக்கொண்டு போவதற்காக ஹேலி ஷெல்பி யின் வீட்டுக்கு வந்திருந்தான். அன்று பொழுது விடிந்ததிலிருந்தே டாம்மாமா வின் குடிசையில் சோகம் குடிகொண்டிருந்தது. டாம் ஒரு நாற்காலியில் அமர்ந்து வேதப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் கின்று கொண்டிருந்த குளோ அத்தை, அவனுடைய சட்டை ஒன்றை மேசைமீது விரித்து, இஸ்திரி போட்டுக்

J 0

30