பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஒரு காகிதம் வாங்கி வந்து, அவன் எழுதத் தொடங் கினன். அவன் மனத்தில் எத்தனையோ எண்ணங்கள் தோன்றின. ஆளுல் அவன் எதையும் எழுத முடிய வில்லை. முன்பு அவன் ஜியார்ஜிடம் கற்றிருந்த எழுத் துக்கள் கூட மறந்து போய்விட்டன. எப்படியோ சிரமப்பட்டு, அவன் சில சொற்களைக் காகிதத்தில் குறித்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ஈவா அங்கே வந்தாள். காகிதத்தைப் பார்த்தவுடன் அவ ளுக்கு வேடிக்கையா யிருந்தது. அவள், அவன் அருகே நின்றுகொண்டு, அவன் எழுதுவதற்கு உதவி செய்தாள்.

  • உன் கடிதத்தைப் பார்த்தவுடன் குளோ அத்தை மிகவும் சங்தோஷப்படுவாள். கூடிய சீக்கிரத்தில் உன்னை ஊருக்கு அனுப்ப வேண்டுமென்று அப்பா விடம் சொல்லப்போகிறேன். நீ சுதந்தரமா யிருக்க வேண்டும். நீயும், உன் மனைவி மக்களும் சேர்க் திருக்க வேண்டும். அதுதான் எனது ஆசை!” என்று ஈவா சொன்னுள்.

அப்பொழுது அங்கே வந்த அகஸ்டின், டாம் கடிதம் எழுதுவதைக் கவனித்தார். ஈவா தான் அவ னுக்கு உதவி செய்துகொண்டிருந்ததாகக் கூறினுள் அவன் எழுதியது சரியாயில்லை யென்றும், அன்று மாலை அவனுக்காகத் தானே எழுதித் தருவதாகவும் அகஸ்டின் கூறிவிட்டுச் சென்ருர், அவ்வாறே மாலை யில் கடிதம் எழுதப்பெற்று, தபாலிலும் சேர்க்கப் பட்டது. ஈவா அடிமைகள் எல்லோரிடத்தும் அன்பா யிருந்து வந்தாள். ஒரு நாள் மாதா கோயிலுக்குப் போகவேண்டு மென்பதற்காக, அவளுடைய அன்னை

54

54