பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

டாமுக்குப் பரிசாக அளித்த சில பொருள்கள் இருந்தன. அவைகளை யெடுத்து அவன் ஆற்றில் எறிந்து விட்டான். பிறகு தோத்திர கீதங்களைக் கையில் வைத்துக்கொண்டு, நீ சமயப்பற்று மிகுந்தவனே?" என்று கேட்டான். "ஆம், யசமான்' என்று டாம் சொன்னன். 'இதெல்லாம் எனக்குப் பிடிக்காது! என்னுடைய இடத்தில் கூச்சலிடுவது, பிரார்த்தனை செய்வது, கீதங்கள் பாடுவது முதலியவைகளை நான் அனுமதிப்ப தில்லை. இனிமேல் எச்சரிக்கையாயிரு! நான்தான் உனக்கு மாதாகோயில், தெரிந்துகொள்!' டாம் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. ஆனல் அவனுடைய உள்ளம் 'இல்லை'யென்று கூறிற்று. டாமின் பெட்டியைத் துாக்கிக்கொண்டு லெகிரி நடந்து சென்ருன். நீகிரோவர்கள் நல்ல உடைகளை உடுத்துவது அவனுக்குப் பிடிக்காது. அவன் டாமின் சட்டைகளையும், கால்சட்டைகளையும் கப்பலில் இருந்த ஒருவனுக்கு விற்றுவிட்டான். பெட்டியையும் ஏலத்தில் விற்றுவிட்டான். பிறகு மறுபடியும் டாமிடம் சென்று, 'இப்பொழுது நீ அணிந்திருக்கிற உடைகளைக் கவன மாக வைத்துக்கொள். ஒரு வருடத்திற்கிடையே உனக்கு வேறு துணிகள் வாங்கித் தரமாட்டேன் I என்று சீறிப் பேசினன். அவனுடைய நடையும், உடையும், பேச்சும் அருவருப்பாக இருந்தன. டாம் வருத்தத்துடன் தலைகுனிந்து நின்ருன். - அடுத்தாற்போல், லெகிரி பெண்கள் இருந்த இடத்திற்குத் திரும்பினன். அங்கே எமிலினும் வயது முதிர்ந்த ஒரு ஸ்திரீயும் இருந்தனர். லெகிரி, எமிலி னின் கன்னத்தில் தட்டி, உற்சாகமாயிரு ' என்று.

& O.

80