104
டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா
உழைப்பு வாழ்வுக்கு உதவுகிறது என்றால், உடற்பயிற்சி உடலுக்கு உதவுகிறது.
உடற்பயிற்சியைத் தவிர்த்து விடுவதன் காரணமாக, ஒருவர் தனது உடல் சிறப்பாகப் பணியாற்றும் தகுதியிலிருந்து தன்னையே சீரழித்துக் கொள்கிறார்.
ஒருவரின் சோம்பேறித்தனமான உடல் 100க்கு 27 சதவிகிதம்தான் பயன்படுகிறது. மிகவும் சொற்பமான திறனையே வெளிப்படுத்துகிறது.
அதே மனிதர், ஆர்வத்துடன் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கும் பொழுது 65 சதவிகிதம் திறமையாளராக செயல்படுகிறார் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
இப்படிப்பட்ட இன்பகரமான உடற்பயிற்சி, உடலை சாதனைக்குத் தயாராக்குவதுடன், இளமையைக் கட்டிக் காக்கவும் முதுமையை விரட்டி அடிக்கவும் உதவுகிறது. ஒத்துழைக்கிறது.
குளத்திலே பாசி நிறைந்து கிடக்கிறது. அதில் குளிக்கப் போகின்ற ஒருவர், கரையோரத்தில் நின்று பாசியைக் கையால் தள்ளி ஒதுக்கி விட்டு, தனது காரியத்தை சாதித்துக் கொள்கிறார்.
தள்ளி விடுவதனாலேயே பாசி ஒதுங்கித் தூரமாகப் போய்விடாது. மீண்டும் நீரலையோடு வந்து கொண்டு தான் இருக்கும். நாம் தள்ளிக் கொண்டுதான் இருக்க வேண்டும். பாசியைத் தள்ளும் வரை அவருக்கு இடம் கிடைக்கிறது. நிறுத்திவிடும்போது, பாசி வந்து இடத்தை மூடிக்கொள்கிறது.
இந்த முதுமையும் களத்துப் பாசி போல்தான்.