பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

37


சுரப்பிகள் முதிர்ச்சியடைந்து, இயல்பாக சுரக்கும் ஆற்றலை இழந்து போவதால்தான், முதுமை வருகிறது என்ற ஒரு பதிலை நாம் பெறுகிறோம். அப்படியென்றால், அப்படிப்பட்ட சுரப்பிகளை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் புதிதாக வைத்து விட்டால் மீண்டும் இளமையை அடைந்து விடலாமே என்று எண்ணுவோரும் உண்டு. இது நியாயமான ஆசைதான். ஆனால், சுரப்பிகளின் அமைப்பு அப்படி அல்லவே!

எந்த ஒரு சுரப்பியும் தனியாக இயங்கவில்லையே! சுரப்பிகள் அனைத்தும் ஒன்றையொன்று தழுவியும். ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் தான் விளங்குகின்றன. ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. வயதாகும் பொழுது எல்லா சுரப்பிகளுமே முதிர்ந்து போகின்றன. அவற்றில் எது ஆற்றல் உள்ளது. எவை ஆற்றல் இழந்தன என்று எப்படி கண்டுபிடிப்பது?

குறிப்பிட்ட ஒரு சுரப்பி செயல்பட முடியாமற் போகிறது என்றால், அது குறிப்பிட்ட ஒரு நோயினால் தாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருக்கிறது. என்பதுதான் அர்த்தம். ஒன்றை நாம் மாற்ற முயன்றால், மற்ற எல்லா சுரப்பிகளின் தன்மைகளும் மாறிப்போனாலும் போகுமே!

ஆகவே மீண்டும் இளமையைக் கொண்டு வர முயல்வது என்பது முட்டாள்தனமான ஆசையாகும். உதாரணத்திற்கு ஒன்று, ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு நின்று போகிறது. அதை மாற்றி மீண்டும் அது ஏற்பட முயற்சி செய்வது, இயற்கையான உடல் இயக்கத்திற்கு எதிராகச் செய்கின்ற தீங்காக அது அமையும். ஆகவே, இயற்கையோடு இயைந்து நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.