68
டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா
போய்விடுகின்றன. காரணம், கண்தசைகள் பலவீனப்பட்டுப் போவதால் தான்.
கண் தசைகள் பலவீனப்படும் பொழுது மாற்றம் நிகழ்கிறதே அதற்கு பிரஸ்பியோபியா (Presbyopia) என்று பெயர்.
இந்த சரிகட்டிப் போகாத கண் தசை ஆற்றலின்மை காரணமாக, பார்வையின் சக்திமங்கிப் போய்விடுகிறது. இந்த பார்வை குறையும் தன்மை இருபதிலிருந்தே தொடங்கி விடுகிறது என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.
20 வயதில் தொடங்குவது இளமையில் தெரிவதில்லை. அது 40 வயதாகும்பொழுது நன்றாக உரைக்கச்செய்கிறது. 60 வயதிலோ அந்தக் கண் தசைச் செயல்கள் களைத்துப் போய் கண் மங்கலாகப் போக வைக்கின்றன.
அதனால்தான் 40-ல் தொடங்குகிற கண் பார்வை மங்கலுக்காகக் கண்ணாடியை அணிந்து குறை களையும் செயல் மேற்கொள்ளப்படுகிறது. இதை வெள்ளெழுத்து என்பார்கள்.
இன்னும் வயதாக ஆக, கண்ணிலுள்ள லென்சுப் பகுதியானது. சுற்றிலும் மறைக்கப்படுகிறது. அதனால் பார்வை மேலும் மங்கலாகிப் போகிறது படிப்பதற்கு அதிகமான வெளிச்சம் தேவைப்படுகிறது.
இப்படி லென்சுப் பகுதியானது திரையிடப்படுவது போன்று மறைக்கப்படுவதால் தான். பார்வையே பழுதாகிப் போகிறது. அது ஒரு கண்ணையோ அல்லது இரு கண்களையோ குருடாக்கி விடுகிறது. இதை கண் சதை வளர்தல் காட்டரேக்ட் (Cataract) என்று கூறுகின்றார்கள்.