பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் இளமையாக வாழலாம்

73


இரண்டாகக் காணப்படுவதுதான். அது உண்மையல்ல என்று பால் கூறுகிறார்.

பேராசிரியர் பால் மேலும் கூறுகிறார். மனித அறிவானது ஒரு வகை கூட்டுச் சக்தியாகும். பின்னிப் பிணைந்து பிரித்து எடுக்க முடியாத அளவில் ஒருமித்த அமைந்த அமைப்பாகும். இளமையில் வளர்ந்து, முதுமையில் தளருகின்ற பண்பாற்றல் உடையதாகும்.

இருந்தாலும், கல்வி, வயது, பால் போன்றவற்றிற்கும் மேலே, வயதானாலும் மூளை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் உடல்நலம் தெளிவாக உள்ளவர்களுக்கு மட்டுமே என்ற குறிப்பை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சிந்தனைத் தெளிவு:

சிறு குழந்தைகளுக்கு தான் கற்பனா சக்தி அதிகம். சிறுவர்களுக்குத்தான் சிந்தனை செய்யும் ஆற்றல் நிறைய உண்டு என்று பலர் பேசக் கேட்டிருக்கிறோம். இதையே உறுதிப்படுத்திக் கூறுபவர்களும் உண்டு.

ஆனால், சிறுவர்கள் குழந்தைகள் ரசித்துப் படிக்கும் பல மாயாஜாலக் கதைகள், கற்பனை செறிந்த கதைத்துத் துணுக்குகள் பலவற்றைப் படைத்த மேதாவிகள் எல்லோரும் முதுமையடைந்தவர்களே என்னும் உண்மையையும் நாம் மறந்துவிடக் கூடாது.

வயது அதிகமாக ஆக, பெரியாரின் சிந்தனைகள், இராஜாஜி கருத்துக்கள், காந்தியாரின் குறிப்புக்கள், அண்ணாவின் உவமைகள் எல்லாம் மெருகேறியிருந்தன என்பதெல்லாம்; நிதரிசனமாக நாம் பார்த்தவை தானே!

வயதாவதற்கும் கற்பனா சக்தி குறைவதற்கும், வயதாவதற்கும் ஞாபகம் தவறிப் போவதற்கும் சம்பந்தமே இல்லை.