பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


ஏனென்றால் வயதேறும் பொழுது முதுமை மட்டும் கூட வருகிறது என்பதில்லை. அறிவும் அனுபவமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றன என்பதும் உண்மைதானே!

இன்னொரு கருத்தையும் நாம் உணர்வது நல்லது.

முதுமை காலத்தில் அறிவு குறைவதில்லை. ஒரு காரியத்தை செய்வதிலோ, ஒன்றை நினைத்து உருவாக்குவதிலோ இருக்கும் ஆழ்ந்த தன்மை (Concentration) சற்றும் மாறுபடுவதில்லை. மாறாக நல்ல செழுமையுடன் தான் இருக்கிறது.

ஒருவேளை நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தான் ஆழ்ந்த சிந்திக்கும் தன்மை குறையுமே தவிர, நல்ல உடல் நலம் உள்ளவர்களுக்கு எல்லாமே கூடுதலாகத் தான் இருக்கிறது. அப்படித்தான் இருக்க வேண்டும்.

இளைஞர்களைவிட முதியவர்களுக்கு என்ன சாதகம் என்றால், அவர்களால் ஒரு காரியத்தில் கண்ணுங் கருத்துமாக கவனத்துடன், அறிவார்ந்த அனுபவத்துடன் ஈடுபட முடியும். என்பதுதான்.

இளமையும் முதுமையும்

இளைஞர்கள் விரைவில் களைப்படையாமல் ஒரு காரியத்தை செய்யலாம். முதியவர்கள் சற்று முன்னதாக களைப்படைந்து விடுவார்கள் என்பதைத் தவிர, இளைஞர்களை விட முதியவர்கள் செய்யும் காரியம் சிறப்பாகவே அமையும்.

இந்தப் பண்புகளை உணர்ந்து செய்யும் முதியவர்களே, வீட்டிலும் நாட்டிலும் வெற்றிமிகுந்த புகழுடன் விளங்குகின்றார்கள். மற்றவர்களால் ஏன் அவ்வாறு முடிவதில்லை என்றால், அவர்களுக்கு முதலில் தன்னம்பிக்கை இல்லை. அடுத்தது தன்னால் முடியும் என்று முயற்சித்துப் பார்க்கக் கூட முனையும் முனைப்பில்லை.