பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமையிலே காட் டில திரிந் தபோது, தற்காப்புக்காக, உயிர் வாழ்வதற்காக அவன் கொண்டிருந்த வலிமை, திறமை, சுறுசுறுப்பு பரபரப்பு எல்லாம், கூட்டங் கூட்டமாகக் கூடி வாழத் தொடங்கிய போது குறையத் தொடங்கியது. பிறரை நம்பி தன் வாழ்க்கையை ஆரம்பித்த போது பின்னும் குறைந்தது. மனிதர்களை நம்பி வாழ்ந்தவன் மனிதர்களின் மேல் கசப்படைந்த பொழுது, எந்திரங்களை நம்பத் தொடங்கினான். வாழ்க்கை வளத்துக்காகவும் வளர்ந்து வரும் வசதிகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் எந்திரங்களைப் படைத்து அவைகளுக்கு அடிமையானான். கற்காலம் பொற்காலமாக மாறியது. கல் போன்று வலிமையாக இருந்த மனித உடல், பஞ்சு போல் மாறி மனித இனத்திடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. மென்மையாக இருக்க வேண்டிய உள்ளம் வன்மையாக மாற, வன்மையாக இருக்க வேண்டிய தேகம் மென்மையாகிவிட்டது. செயற்கையிலே மாறிய வாழ்வு, நாகரீகத்திலே ஊறிய சிங்கார வாழ்வு - தேகத்தின் செழுமையைக் குறைத்து வளமையை கரைத்தது. திறமையை மறைத்தது. சோம்பலை நிறைத்தது. முடிவு குச்சி போன்ற கால்கள் கொடி போன்ற உடலை தாங்க, கண்ணைக் கவரும் ஆடைகள் உடலை : முடிக் கவர்ச்சி காட்டத்தொடங்கின.