பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

தருகின்ற நேரான பாதையை மறந்துவிட்டு வேறு வழியில் செல்லும் பொழுது தான் என்று கூறுகிறார் நேருஜி அவர்கள்.

எனவே நேரான வழியைத் தெரிந்து கொள்வோம். சீரான பாதையை புரிந்து கொள்வோம். தெளிவான மனதுடன் நடந்துகொள்வோம். தேர்ந்தவர்களின் அனுபவங்களைத் துணையாகக் கொள்வோம்.

வாழ்க்கையில் வளமாக வளர்வோம். உயரமாக வளர்வோம். உன்னதமாக வளர்வோம், உற்சாகமாக வாழ்வோம். உலகம் புகழுடன் வாழ்வோம். உவப்புடன் உண்மை வாழ்வு வாழ்வோம்' என்று இன்றே முடிவு எடுப்போம்! செயல் தொடுப்போம். சாதனை குவிப்போம்.

நீங்களும் உயரமாக வளரலாம் என்றதும் நினைவுகளில் நிலவு உலா வந்திருக்குமே உயரம் என்ற சொல்லுக்கு மிகுதி, அதிகம். மேல் உச்சம், உயர்வு என்றெல்லாம் பல அர்த்தங்கள்.

ஆமாம். தற்பொழுது உங்களுக்குள்ள உடல் நிலையில் மிகுதியைக்கான, மேன்மையை, மேல் உயர்வை, உச்சத்தைப் பெறுகிற உன்னத லட்சியம் எடுக்கிற முயற்சிக்கு இதயத்து உணர்ச்சியும் இதம் காண்கிற மலர்ச்சியும், நாளுக்கு நாள் நஞ்சைப் பயிர் போன்ற வளர்ச்சியும் கொள்ள, நீங்கள் நெஞ்சத்திலே உறுதி கொள்ள வேண்டும்

பார்த்து விடுவோம் ஒரு கை என்ற இலட்சய தீபத்தை ஏந்திக் கொள்ளுங்கள். இடர்கள் வந்தால் நீந்திக் கொள்ளுங்கள் விளையும் வெற்றியும் நம் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையில் தொடருங்கள் என்று உங்களை வழிநடத்தித் தொடர்கிறேன்.