பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

அதற்குப் பிறகு 2 ஆண்டுகள் அவன் உடல், உயரத்தில் வவும் இல்லை. அவன் தாண்டுகின்ற உயரமும் உயரவில்லை. அபபடியே நின்று போயிற்று. காரணம் புரியாமல் ரஸ்டம்

கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

பயிற்சி செய்தால் எப்படியும் வளர்ந்து விடலாம் என்பதாகத் தெரிந்து கொண்டான். பத்தாண்டுகளுக்குள் குறைந்தது ஒரு அங்குல உயரமாவது வளர்ந்துவிட முடியும் என்று எழுத்து மூலமாகவே உறுதி செய்து கொண்டான். எண்ணியதோடு அவன் நின்றுவிடவில்லை, செயலில் தீவிரமாக முனைந்தான்.

கைகால்களை நீட்டி மடக்கிச் செய்யும் பயிற்சி செய்யத் தொடங்கினான். உயரமான கம்பியில் (Bar) தொங்கிச் செய்யும் பயிற்சிகளைத் தொடர்ந்தான்.

கோடை காலத்தில் ஆற்றோரமாக பலமணி நேரம் ஆடினான். ஆற்றில் நீந்தினான். கையால் நீந்தும் பயிற்சிகளைச் செய்துகொண்டே காலத்தைக் கழித்தான், இளைஞனல்லவா! இலட்சியத்திலே அவனது இதயம் மூழ்கித் திளைத்துக் களித்துக் All ந்தது.

தினமும் அவன் மூன்று தேக்கரண்டி மீன் எண்ணெய் குடித்தான். கேரட் தின்றான். தினமும் தொடர்ந்து அவன் செய்த ஒழுங்கான, முறையான பயிற்சியும், ஒழுக்கமான செயல்களும், னவுடன் உட்கொண்ட மீன் எண்ணெய் போன்றவையும் அவனது கனவை நினைவாக்கின. -

பயிற்சி செய்த சில மாதங்களுக்குள்ளே அவன் தாண்டிக் குதிக்கும் உயரத்தில் முன்னேற்றம் தெரிந்தது. ஆமாம், அவன் 5 அடி 9 அங்குல உயரத்திற்கும் மேலே தாண்டிக் குதித்தான்.