பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்களும்

உயரமாக வளரலாம்

1. நிச்சயம் முடியும் நீங்கள் உயரமாக வளரலாம் என்று கூறுகிறோம். நிச்சயம் முடியுமா என்றால், நெஞ்சிலே இந்த கேள்வி எழுவது நம்பிக்கை இன்மையாலாஅல்லது சந்தேகம் உசுப்பி விடுகின்ற சலனத்தாலா என்று நாம் தர்க்கம் செய்யப் போவதில்லை.

முடியுமா என்ற கேள்வியைக் கேட்டுக் கோண்டே முடங்கிப் போய் விட்டால், எளிதாக முடிகிற காரியம் கூட முடியாமலே போய் விடும். தொடங்கிவிட்டுத் தொய்ந்து போனால், சோர்ந்து போனால் தொடக்கமே முடக்கம் பெற்றுப் போகுமே! முழுமை வராமல் போகுமே!

'முடியும் என்னால் முடியும் நிச்சயம் என்னால் முடியும்! என்ற நம்பிக்கைதான் வேண்டும். அப்படி நினைத்துவிட்டால் நெஞ்சத்தில் தெம்பு தானாகவே ஊற்றாகக் கிளம்பி விடும். காற்றாகப் பெருகிவிடும்.

நம்பிக்கையும் முயற்சியும் பெரிய மலையைக்கூட நகர்த்தி விடும் என்பது ஒரு பழமொழி. நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறைத்தீர்ப்பு என்று பாடுவது நம் காதில் பட்டதுண்டு. நம்மையறியாமலேயே இந்தப்பாட்டை நாம் பல முறை

முணுமுணுத்தும் இருக்கிறோம்.