பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 71


மலைப்பாங்கான பிரதேசமாக இருந்தால், ஏற்ற இறக்கமான சாலைசரிவுகளில் ஒடிப் பழக வேண்டும். அதாவது பல மைல் தூரத்தை பிடிவாதமாக விடாது ஒட


s வேண்டும்.


கடற்கரைப்பிரதேசமாக இருந்தால், மணலில் அதிக துரம் ஒடவேண்டும். கூடைப்பந்தாட்டம் போன்ற விளை யாட்டுக்களைத் தொடர்ந்து ஆட, நெஞ்சுரமும் கால் களுக்குப் போதிய வலுவும் கிடைக்கும்.


குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு, ஒடிப் பழக வேண்டும். ஒட்டக் கடைசி தூரத்தை முடிக்கும் நேரத்தை நிர்ணயித்து, அதை விரைவாக ஒடிப் பழக வேண்டும்.


ஒடிப் பயிற்சி செய்யும் போது, நெடுந் துரத்தை நிற்காமல் தான் ஒடிப் பழக வேண்டும் என்பதில்லை.400 மீட்டர் துரம் ஒடலாம். பிறகு கைகளை வீசி மெதுவாக நடக்கலாம். பிறகு 400 மீட்டர் தூரம் வேகமாக ஒடலாம். பிறகு மெதுவாகக் குதித்துக் குதித்து (logging) ஒடலாம். இப்படியே நிறுத்தி நிறுத்தி ஒடிப் பழகுவதில் நிறைந்த நெஞ்சுரம், உடல் திறன் கிடைக்கிறது. (InterwalTraining)


பிறகு, 200, 100 மீட்டர் போன்ற துரங்களை விரைவோட்டத்திற்குப் பயிற்சி செய்வது போல, ஒடிப் பழக வேண்டும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை விரைவோட்டப் பயிற்சிகள் செய்வது, வேகமாக ஒட வழி வகுக்கும்.


இதுபோன்ற பயிற்சிகளைப் போட்டிக்கு முன் ஒரு வாரமோ, ஒரு மாதமோ செய்தால் பயன் இல்லை. ஆண்டு