பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



எத்தனை மணி நேரம் உறங்க வேண்டும் என்ற ஒரு கேள்வி உடனே எழும் அல்லவா! அந்த நேரக் கணக்கு ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

முட்டாளுக்கு எட்டு மணி நேரம் வேண்டும். அறிவாளிக்கு ஆறு மணி நேரம் போதும், என்று கவிதை பாடுவோரும் உண்டு. ஆனால், ஒருவர் எவ்வளவு நிம்மதியாக உறங்குகிறார் என்பதில்தான் கணக்கு இருக்கிறதே தவிர, நேரத்தில் அல்ல.

தூக்கமானது 112 மணிநேரம் தொடர்ச்சியாக ஒருவருக்கும் இல்லையென்றால், முதலில் உடல் ஆற்றல் குறையத் தொடங்கும். வாழ்க்கையே எரிச்சலாகத் தோன்றும். எடை குறைய ஆரம்பிக்கும். பிறகு. பலப்பல கற்பனைகள் பிறக்கும். அதுவே பயங்கர பூதாகாரமாக மாறி உருவெடுத்து. இறுதியாய் பைத்தியமாக மாற்றிவிடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

நெப்போலியன் இரண்டு மூன்று மணி நேர உறக்கத்தில், களைப்பு நீங்கி மீண்டும் சுறுசுறுப்பு பெற்று விடுவான் என்றும், அதிலும் அவன் குதிரைமீது அமர்ந்து கொண்டே மரம் அல்லது சுவற்றில் சாய்ந்து கொண்டு உறங்குவான் என்று கூறுவார்கள் வரலாற்று அறிஞர்கள்.

ஆக, எங்கே எவ்வளவு நேரம் என்பதல்ல பிரச்சினை. எப்படி உறங்குகிறார்கள் என்பதைக் கொண்டே நாம் அறியலாம்.

இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 4மணி வரையில் அயர்ந்து தூங்கும் பொழுது உடல் இழந்து சக்தியை மீட்டுக் கொள்ள முடிகிறது என்றும் உடல் வள வல்லுநர்கள் குறிப்பிடுகின்றார்கள். சிலர் இன்னும் அதிக நேரம் எடுத்துக் கொண்டு உறங்குகிறார்கள்.