30
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
சொந்த புத்தியில் சிந்தனை செய்து வாழ்பவர்களே, மன நிம்மதியுடன் வாழ்கின்றார்கள். பிறர் சொற்புத்தி கேட்டு அற்பத்தனமாய் நடந்து கொள்பவர்கள். மானம் இழந்து மதிகெட்டு, ஆன துயர் அத்தனைக்கும் ஆளாக்கி அவதிப்படுகின்றார்கள்.
ஆகவே, நோயில்லாமல் வாழ, ஆசையெனும் பொய் நோய்க்கு மட்டும் ஆளாகாமல் இருந்தால் போதாது. அறிவுரையை ஆலோசனையை எங்கிருந்து பெற வேண்டும் என்பதையும் யோசித்துப் பெற வேண்டும்.
இல்லையேல், அந்தப் பொல்லாத பொய்யும், மெய் நோயாய் மாறி, மேனியைக் குலைத்து, வாழ்வையும் அழித்துவிடும்.
உலகநாதனோ சொந்த புத்தியிழந்து வாழ்கிறான். இன்னொருவனோ, சொந்த புத்தியையும் இழந்து. வந்த புத்தியையும் அறியாது. வாயிழந்து போனான். அதாவது வாழ்வுக்கு வழியான வாயின் சுவைகளையும் பயன்களையும் இழந்து போனான். எப்படி?
அந்த கனகசுந்தரத்தின் கதையைக் கேளுங்கள்.