இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
70
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
வழி காட்டுகிறது, எழில் ஏற்றுகிறது. அது தொழிலின் ஆற்றலைத் துரிதப்படுத்துகிறது. இல்லத்தின் மேன்மைக்கு ‘உழைக்கும் ஈடுபாட்டையும் இணைக்கிறது.
அதுவே வாழ்க்கை இலட்சியத்தினை உருவாக்கும் உன்னத வழிகாட்டியாகவும் அமைந்து தனக்கேற்ற இலக்கை நேர் நிறுத்தி அதற்கேற்ற தனிவழியை அமைத்தும் தருகிறது.
இவ்வாறு உடல் நலநிலை நோயில்லாத வாழ்வை அளிக்கிறது என்பதே உண்மை நிலையாகும். அவ்வாறு உண்மையான உயர்ந்த வாழ்வை, நோயில்லாத நிலையை நாம் பெற வேண்டும். அடுத்து செய்ய வேண்டியவை என்னென்ன என்ற வினாவையும் எழுப்புவோம். அதுவே அறிவுள்ளவர் செயலாகும்! அதற்குப் பதில் ஒன்று உண்டு. அதுதான் நலம் தரும் பழக்கங்கள் என்பதாகும்.
அடுத்து வரும் தலைப்புக்களில் நலம் தரும் பழக்கங்கள் என்னென்ன என்பதைக் காண்போம்.