பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



1. உடல் செய்கின்ற வேலைகளினால் உடல் சக்தியை இழந்து தளர்ச்சி அடையும் பொழுது, சக்தியை அளிக்கவும். உடல் அமைப்பை சதா காலமும் கட்டிக்காத்து, ஒரே நிலைமையில் அமைத்து வைத்திருக்கவும் உண்கிறோம்.

2. அன்றாட செயல்களை உறுப்புக்கள் தங்கு தடையின்றி செய்யும் வல்லமையைக் கொடுக்கவும் உணவு தமக்குப் பயன்படுகிறது. அதனால்தான் நாம் உணவை உண்கிறோம்.

அப்படியானால், நாம் எத்தகைய உணவை அளித்தால் உடல் ஏற்ற தன்மையில் அமையும் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டுமல்லவா? வெறும் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும் மட்டும்தான் நாம் சாப்பிடுகின்றோமா என்றால், அதற்காக மட்டுமல்ல, முக்கியமாக மூன்று நோக்கங்களுக்காகவும் தான் உண்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1. நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியையும் மற்றும் பலத்தையும், நேரிய நெஞ்சுரத்தையும் (Stamina) நல்கிட வேண்டும்.

2. இயற்கையின் தாக்குதல்கள், சமூகச் சாடல்கள் மற்றும் நோய்க் கிருமிகளின் முற்றுகைகள் இவற்றிலிருந்து உடலைக் காத்து மீட்டு, வளத்துடன் வாழச் செய்திடவும் வேண்டும்.

3. அத்துடன், நோயில்லாமல் நீண்ட நாள் மனநலத்துடன் உடல் வாழ்ந்திடவும் உதவிட வேண்டும்.