பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இதுதான் இலட்சியம் மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !! மகிழ்ச்சி !!! மனித வாழ்க்கையின் இலட் சியமே இது தான். மகிழ்ச்சியை விரும்பாத மனிதர் யார் இருக்கின்ருர் : ஏழை பணக்காரர், நோயாளி பலசாலி, தத்துவஞானி, தரை மட்ட முட்டாள் என்று யாரை எடுத்துக் கொண்டாலும், மகிழ்ச்சியை விரும்பாதவர் யார் ? அப்படியென் ருல் எங்கே இருக்கிறது அந்த மகிழ்ச்சி ! ? வளைந்து நிற்போருக்கு அது வான வில்லாகத் தோன்று கிறது. களைத்துப் போய் நிற்போருக்கோ அது கானல் நீராகத் தெரிகிறது. விரும்பி நிற்போருக்கு அது இயற்கையாகப் படர்ந்திருக்கிறது. இனிதாகத் தொடர்ந்திருக்கிறது. "எங்கும் இன்பம் எதிலும் இன்பம், எப்பொழுதும் இன்பம் என்று இயற்கையானது மனிதர்களே அழைக்கிறது. ஆனல், இயற்கையின் அழைப்பினே ஏற்பவர் யார் ? ரசிப் பவர் யார் ? இணைபவர் யார் ? மகிழ்பவர் யார் ? நீ, ம.-1