18 வாழ்ந்து செல்கின்றன. ஆளுல் ஆறறிவுள்ள மனிதனத் தவிர, என்கிருர். உண்மைதானே ! -*): மகிழ்ச்சிதான் முக்கியம் என்று மனிதன் நினைக்கவில்லை. திருப்திதான் தேவை என்று அவன் தேடவில்லை. ஆனந்தம் தான் வாழ்வின் ஜீவநாடி என்று அவன் உணரவில்லை, அடிப்படைத் தேவையான உணவு, உடை, உட்கார இடம் என்று எல்லாம், அளவுக்கு அதிகமாக வேண்டும் என்று எண்ணி, அதை சேர்க்க பல வழிகளில் முயற்சிகள் பண்ணிப் பண்ணி பாழாய் போகிருன், கீழாய் சாகிருன். தரையில் நின்று கொண்டே கற்பனை ஆசைகளில் வானத்தில் மிதக்கி றன். தவிக்கிருன், ஒருமுறை தான் வாழ்க்கை வருகிறது. இரண்டாவது வாய்ப்பு (Chance) என்பது எப்பொழுதுமே அவனுக்குக் கிடையாது என்பதை அவன் மறந்தே போகிருன், 'மகிழ்ச் சியான மனிதனே உலகத்தில் எந்த இடத்திலும் இல்லை' என்று வரலாற்ருசிரியர்கள் வேதனையோடு எழுது கின் ற அளவிற்கு, அவன் போராடுகிருன். புறம்போகிருன். புரையோடிச் சா கிருன். - காரணம் என்ன ? சிந்திக்கத் தெரிந்தவனல்லவா மனிதன். அவன் நொடிக்கு நூருயிரம் விஷயங்களை யோசிக்கத் தெரிந்த வன ல்லவா ! அதனுல்தான் கெட்டான். கெடுகிறன். இன்னும் கெடுவான். -1. கடந்துபோன நிகழ்ச்சிகளையெல்லாம் கவனமாகத் திரட்டிக் கொண்டுவந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிருன்!