பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


  • நடக்கின்ற நிகழ்கால நிகழ்ச்சிகளுக்கெல்லாம் குற்றம் கூறிக்கொண்டே, நாளெல்லாம் நலிந்து கொண்டிருக்கிருன்,

எதிர்காலத்தில் என்ன நடக்குமோ ? எப்படி முடியுமோ என்ற கற்பனை பயங்களில் கவிழ்ந்து கரைந்து கொண்டிருக் கிருன் ! பின் எப்படி அவளுல் மகிழ்ச்சியாக வாழ முடியும் ? முக்காலத்தையும் அவன் முட்டாள் தனமாக அல்லவா மூழ்கடித்துக் கொண்டிருக்கிருன். வீணடித்துக்கொண்டு வாழ்கிருன். விவஸ்தையில்லாமல் தாழ் கிருன் . மகிழ்ச்சிதான் வாழ்க்கை என்று எப்பொழுது மனிதன் நினைக்கிருனே, அப்பொழுதே மனிதன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்துவிடுகிருன். - நமது வாழ்க்கைப்பயணம். ஒரு தீராத பயணம். இறப்பென்னும் நகரைக் நோக்கி, நிற்காமல் ஒடுகின்ற நெடும் பயணம். கடும் பயண , சுடும் பயணம். இராப் பகல் என்பதில்லாமல், காலம் நேரம் பார்க்காமல், வாழ்க்கை எனும் எஞ்சின் நம்மை இழுத்துக் கொண்டு ஒடுகிறது. பிணைக்கப்பட்டுள்ள பெட்டிகளாக, எதுவும் பேசாமல், ஏனென்று கேட்காமல், என்னவென்று புரியாமல் நாம் பின்னல் ஒடிக் கொண்டிருக்கிருேம். முதலில் போகின்ற செம்மறியாட்டின் பின்னே தலை குனிந்து புரியாமல் போகின்ற ஆட்டுகுட்டிகளாக நாம் நம் பயணத்தை மேற் கொண்டிருக்கிருேம். - நம்பிக்கைதான் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கைதான் நமக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.