பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நம்பிக்கை தான் வாழ்க்கை, நம்பியவர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு... ஆகவே, நாம் மகிழ்ச்சியோடு இருக்கிருேம் என்ற நினைவுடனும், நம்பிக்கையுடனும் வாழ வேண்டும். அதுவே அழகான வாழ்க்கை. ஆரோக்கியமான வாழ்க்கையும்கூட. மகிழ்ச்சி என்பது போய் இறங்கும் ரயில் நிலையமல்ல. அந்த மகிழ்ச்சி என்பது தொடர்கின்ற பயணம். போய்க் கொண்டிருக்கும் பயணத்தில் தொடர்ச்சி இருக்குமே தவிர, நின்று போவதில் அல்ல என்பதை உணர்ந்து விட்டால், மகிழ்ச்சி என்பது ஒரு தொடர் பயணம். அது வாழ்க்கைப் பயணத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளலாம். பயணத்தில் பல சுவையான நிகழ்ச்சிகள் தொடரும். நாம் விரும்புகின்றவை எல்லாம் நமக்கு மகிழ்ச்சி அளித்து விடும் என்பதும் தவறு. சில சமயங்களில் நாம் படுகின்ற துன்பமும், முயற்சியின் வேதனையும் கூட நமக்கு மகிழ்ச்சியை யும் அளிக்கின்ற சக்தி உடையதாக இருக்கின்றன. ஆகவே, எதையும் ஏற்பதிலும், ரசிப்பதிலும், உள்ளதை விரும்புவதிலும் இழப்பிலும் நல்லதைப் பெறுவதிலும், நம்பிக்கையிலும், நல்ல நினைவுகளிலும், முடியாததையும் முயல்கின்ற முயற்சியிலும் தான் நல்ல மகிழ்சசி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் போதும். அதுவே மகிழ்ச்சியான வாழ்க்கை. இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை மலரும் அடித்தளம் ஒன்றும் இருக்கிறது ? அது என்ன ? எங்கே இருக்கிறது ? எப்படி கொள்ளலாம் என்பதையும் காண்போம்.