பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அதளுல் தான் மனம் தான் வாழ்க்கையின் முக்கியம் என் கிருர்கள் பெரியவர்கள். தன்னைப் போல் பிறரையும் நேசிக்கத் தெரிந்தவர்களே தாமும் மகிழ்கிருர்கள். மற்றவர்களையும் மகிழ்விக்கின் ருர்கள். தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்த விரும்புகின்றவர்களோ மகிழ்ச்சிக்கு அப்பாலே போய் விழுகின்ருர்கள். 'தன்னைத்தான் தாழ்த்துகிறவன் எவனும் உயர்த்தப் படுவான். தன்னைத்தான் உயர்த்துகிறவன் எவனும் தாழ்த்தப் படுவான் என்கிற ஏசுவின் அன்பு மொழிகளை இங்கே நினைவு கூறலாம். மகிழ்ச்சியான வாழ்வுக்கு உடல் தெப்பும் மனத் தெம்பும் வேண்டும். தெம்பான வாழ்வுக்கு அன்புதான் மூலதனம். மூலதனத்தை வைத்துதான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடிகின்ற இந்தக் கால வாழ்க்கையைப் போல, அன்பாகிய மூலதன த்தை வைத்து மகிழ்ச்சியாகிய வருமானத்தைப் பெருக்கி, மனம் போல வாழ முயலுவோம். அதுவே அறிவார்ந்த வாழ்க்கையாகும். மகிழ்வான வாழ்க்கையுமாகும்,