பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வந்த சீட்டுக்களே வைத்துகொண்டு சிறப்பாக ஆட்டம் ஆடுவதுபோல, தங்களே உணர்ந்துகொண்டு தங்களது ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டவர்தான் சிறந்த ஆட்டக் காரர்கள்-மனிதர்கள் ஆவார்கள். சீட்டாட்டத்தில் வந்து சீட்டுகளே ஏற்றுக் கொண்டு, அந்த ஆட்டத்திற்குரிய விதிமுறைகள் பிறழாது. சீட்டுகளைப் பயன்படுத்தி வெற்றிகரமாக ஆடுவது சீட்டாட்டம். அது போலவே, புறத்தில் உள்ளவர்களே ஏற்றுக் கொண்டு, சமுதாயவிதி பிறழாது சந்தோஷமாக வாழ்ந்து கொள்வது தான் வாழ்க்கை ஆட்டமாகும். அதற்குத்தான் பெருந்தன்மையான மனம் வேண்டும். பண்பான குணம் வேண்டும் என்பார்கள். அது எப்படி வரும் எப்படி பொருந்தும் என்பதை அடுத்து காண்போம். -